இலங்கை கடற்படையின் அட்டூழியம் – புதுக்கோட்டை மீனவர்கள் 13 பேர் கைது

viduthalai
1 Min Read

புதுக்கோட்டை ,டிச.8 புதுக் கோட்டை மாவட்டம் ஜெகதாப் பட்டினம் மற்றும் கோட்டைப் பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் 13 பேரை, எல்லை தாண்டி வந்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் நேற்று முன்தினம் (6.12.2023) இரவு கைது செய்தனர். மிக்ஜாம் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததால் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் இருந்த புதுக்கோட்டை மாவட்ட மீன வர்கள் ஒரு வாரத்துக்குப் பிறகு நேற்று முன்தினம் கடலுக்குச் சென்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த நடேசன் என்பவருக்குச் சொந்த மான படகில் என்.ராமநாதன்(29), கே.முத்தாலு(55), என்.அஞ்சப்பன்(56), பி.ஆறுமுகம்(62), பி.சர்புதீன்(48) ஆகியோரும், பி.ரிவானுல்லா(46) என்பவருக்குச் சொந்தமான படகில் எ.அபு மன்சூர்(48), ஆர்.இப்ராகிம்(45), என்.அகமது(38), ஜி.கணேசன்(53) ஆகியோரும், கோட்டைப்பட்டி னத்தைச் சேர்ந்த எஸ்.டிக்சன் என்பவருக்குச் சொந்தமான படகில் எஸ்.முனியசாமி(40), பி.செந்தூரபாண்டி(24), பி.அருள் (33), எம்.தன்ராஜ்(55) ஆகியோரும் கடலுக்குச் சென்று,நேற்று முன் தினம் இரவு ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி 3 படகுகளையும் பறிமுதல் செய்ததுடன், மீனவர்கள் 13 பேரையும் கைது செய்தனர். பின்னர் 13 பேரையும் ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத் தினர்.
அனைவரையும் வரும்21ஆ-ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து, அவர்கள் யாழ்ப் பாணம் சிறையில் அடைக்கப்பட் டனர். 8 பேர் சிறையிலடைப்பு: இதற்கிடையே, நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 8 பேரும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட் டனர். அவர்களை வரும் 20-ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதன் பேரில், வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். இலங்கை கடற்படையினரால் 2023 ஜனவரியிலிருந்து இதுவரை 195 மீனவர்கள் சிறைப்பிடிக்கப் பட்டு, 31 விசைப் படகுகள் பறி முதல் செய்யப்பட்டுள்ளது குறிப் பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *