கன்னியாகுமரி மாவட்ட கழகம் சார்பாக சமூகநீதி விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்கி பரப்புரை

viduthalai
1 Min Read

கன்னியாகுமரி மாவட்ட கழகம் சார்பாக திராவிடர் இயக்கத்தின் முக்கிய கொள்கையான அனைவருக்கும் அனைத்து உரிமைகள் கிடைக்க வேண்டும் என்ற சமூக நீதிக் கொள்கை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற் படுத்தும் வகையிலான பரப்புரை நாகர்கோவில் மாநகர பகு திகளில் நடந்தது. மாவட்டத் தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் முன்னிலை வகித்தார். கலைவாணர் பெயரன் என்.எஸ்.கே.கே. இராஜன். கழக காப்பாளர் ஞா. பிரான்சிஸ், மாவட்ட துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள், இலக்கிய அணி செயலாளர் பா. பொன்னுராசன்; மாணவர் அணி அமைப்பாளர் இரா.கோகுல், தோழர்கள், பெரியார் பற்றாளர் கள் பங்கேற்று பொதுமக்களுக்கு சமூக நீதி குறித்த நூல்களை துண்டறிக்கைகளை வழங்கினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *