கன்னியாகுமரி மாவட்ட கழகம் சார்பாக திராவிடர் இயக்கத்தின் முக்கிய கொள்கையான அனைவருக்கும் அனைத்து உரிமைகள் கிடைக்க வேண்டும் என்ற சமூக நீதிக் கொள்கை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற் படுத்தும் வகையிலான பரப்புரை நாகர்கோவில் மாநகர பகு திகளில் நடந்தது. மாவட்டத் தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் முன்னிலை வகித்தார். கலைவாணர் பெயரன் என்.எஸ்.கே.கே. இராஜன். கழக காப்பாளர் ஞா. பிரான்சிஸ், மாவட்ட துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள், இலக்கிய அணி செயலாளர் பா. பொன்னுராசன்; மாணவர் அணி அமைப்பாளர் இரா.கோகுல், தோழர்கள், பெரியார் பற்றாளர் கள் பங்கேற்று பொதுமக்களுக்கு சமூக நீதி குறித்த நூல்களை துண்டறிக்கைகளை வழங்கினர்.
கன்னியாகுமரி மாவட்ட கழகம் சார்பாக சமூகநீதி விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்கி பரப்புரை
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books