மதுரையில் நடைபெற இருக்கும் மனுதர்ம யோஜனா நவீனகுலக்கல்வி திட்டத்தை எதிர்த்து தொடங்கப்பட்ட பிரச் சாரப் பயண நிறைவு விழா கூட்ட துண்டறிக்கை பரப்புரையை கடந்த 2 நாட்களாக மேனாள் மாவட்ட செயலாளர் க.அழகர், தலைமையில் மாவட்ட துணை தலைவர் பொ.பவுன்ராஜ், மாவட்ட இ.அணி தலைவர் க.சிவா, இ.அணி செயலாளர் பேக்கரி கண்ணன், இ.அணிஅமைப்பாளர்வேல்துரை, பகுதிச் செயலாளர்கள் மு.மாரிமுத்து, காசி ஆகியோர் ஓபுளாபடித் துறை பகுதியில் மேற்கொண்டனர். பகுதி வர்த்தகப்பெருமக்கள் துண்டறிக்கையைப் பெற்றுக்கொண்டு நன்கொடைகளை மகிழ்ச்சியுடன் வாரி வழங்கி தோழர்களை உற்சாகப்படுத்தினர்.