இலங்கை கடற்படையின் அத்துமீறல் ராமேஸ்வரம் மீனவர்கள் எட்டு பேர் கைது

1 Min Read

ராமேசுவரம், டிச.7 இலங்கை கடல் படையினரால் ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அருகே உள்ள மண்டபம் பகுதியைச் சேர்ந்த 8 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மிக்ஜாம் புயல் அச்சம் காரணமாக கடந்த சில நாட்களாக மீனவர்கள் கடலுக்குச்செல்லவில்லை. இந்நிலையில், 6 நாட்களுக்குப் பிறகு நேற்று (6.12.2023) ராமேசுவரம், மண்டபம் மீன்பிடித் துறைமுகங் களில் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில், 5,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். மண்டபத்திலிருந்து கடலுக்குச் சென்று நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டி ருந்தனர். அப்போது, அவ்வழியே ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, விசைப்படகை சிறைப்பிடித்து, அதிலிருந்த மீனவர்கள் ஜெயஸ்தன்(36), தால்ஷா (50), சார்லஸ் (54), லாசர் கெபிஸ்டன் (30), தினேஷ் (38),முனியசாமி (58), அருள் பிரிட்சன் (28), ஜான் சைமன் (31)ஆகியோரைக் கைது செய்தனர். இவர்கள் இன்று (டிச.7) இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *