திராவிடர் கழகம் சார்பில் தென்காசியில் சிவந்திநகர் கலைஞர் அறிவாலயத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 91-ஆவது பிறந்தநாள் விழா 2-12-2023 காலை 9.30 மணிக்கு மாவட்டத்தலைவர் வழக்கறிஞர் த.வீரன் தலைமையில் எழுச்சியோடு நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் தமிழர் தலைவரின் பிறந்தநாள் செய்தியினை வாசித்தார். புதிய புத்தகமான வாழ்வியல் சிந்தனை பாகம்-17, பகுத்தறிவுப்போராளி ஆசிரியர் கி.வீரமணி 91ஆவது பிறந்தநாள் விழா மகளிர் மலர், விடுதலை ஆசிரியராக 60 ஆண்டுகள் என்ற நூல்களை மாவட்ட திமுக செயலாளர் வே.ஜெயயபாலன் வெளியிட்டார். சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினரும் தென்காசி வடக்குமாவட்ட செயலாளர் வழக்குரைஞர் ஈ.ராஜா பெற்றுக்கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.