தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 91-ஆவது பிறந்தநாள் விழா

1 Min Read
திராவிடர் கழகம்

திராவிடர் கழகம் சார்பில் தென்காசியில்  சிவந்திநகர் கலைஞர் அறிவாலயத்தில்  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 91-ஆவது பிறந்தநாள் விழா 2-12-2023 காலை  9.30 மணிக்கு மாவட்டத்தலைவர் வழக்கறிஞர் த.வீரன் தலைமையில் எழுச்சியோடு நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் தமிழர் தலைவரின் பிறந்தநாள் செய்தியினை வாசித்தார். புதிய புத்தகமான வாழ்வியல் சிந்தனை பாகம்-17, பகுத்தறிவுப்போராளி ஆசிரியர் கி.வீரமணி 91ஆவது பிறந்தநாள் விழா மகளிர் மலர், விடுதலை ஆசிரியராக 60 ஆண்டுகள் என்ற நூல்களை மாவட்ட திமுக செயலாளர் வே.ஜெயயபாலன் வெளியிட்டார். சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினரும் தென்காசி வடக்குமாவட்ட செயலாளர் வழக்குரைஞர் ஈ.ராஜா பெற்றுக்கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *