நியூசிலாந்தில் க.பார்வதி அம்மையார் படத்திறப்பு

Viduthalai
1 Min Read

திராவிடர் கழகம்

நியூசிலாந்து- 2-12-2023 அன்று பெரியார் பெருந் தொண்டர் மானமிகு, க.பார்வதி அம்மையார் அவர்களின் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி க.பார்வதி அவர்கள் பெயரன் ம. பகுத்தறிவன் இல்லத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மானமிகு, மணிநிலவன் அறிவுக்கரசு தலைமையில் படத்தினை திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற்றினார். மற்றும் மானமிகு. முனைவர். இலக்குவன் சொக்கலிங்கம், திரு. ந.செந்தில்நாதன், ம.இந்திராதேவி, ஜா.மைதிலி ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றி, மானமிகு, ம.பகுத்தறிவன் நன்றி உரையாற்றினார். நிகழ்வில் திராவிடர் கழகத் தோழர்கள், தமிழ் சங்கத் தோழர்கள், மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். பார்வதி அம்மையாரின் கடைசி ஆசையின் படி பெரியார் உலகத்திற்கு நிதி திரட்டிக் கொடுக்க முடிவெடுக்கப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *