நியூசிலாந்தில் க.பார்வதி அம்மையார் படத்திறப்பு

1 Min Read
திராவிடர் கழகம்

நியூசிலாந்து- 2-12-2023 அன்று பெரியார் பெருந் தொண்டர் மானமிகு, க.பார்வதி அம்மையார் அவர்களின் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி க.பார்வதி அவர்கள் பெயரன் ம. பகுத்தறிவன் இல்லத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மானமிகு, மணிநிலவன் அறிவுக்கரசு தலைமையில் படத்தினை திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற்றினார். மற்றும் மானமிகு. முனைவர். இலக்குவன் சொக்கலிங்கம், திரு. ந.செந்தில்நாதன், ம.இந்திராதேவி, ஜா.மைதிலி ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றி, மானமிகு, ம.பகுத்தறிவன் நன்றி உரையாற்றினார். நிகழ்வில் திராவிடர் கழகத் தோழர்கள், தமிழ் சங்கத் தோழர்கள், மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். பார்வதி அம்மையாரின் கடைசி ஆசையின் படி பெரியார் உலகத்திற்கு நிதி திரட்டிக் கொடுக்க முடிவெடுக்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *