அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மழை வெள்ளச் சேதத்தைப் பார்வையிட்டார்

1 Min Read

அரசு, தமிழ்நாடு


சென்னை, டிச. 4-
தி.மு.கழக இளைஞர் அணிச் செய லாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள், நேற்று இரவு, தமது சேப்பாக்கம் – திரு வல்லிக்கேணி தொகு திக்கு உட்பட்ட லாயிட்ஸ் காலனி, வி.பி. ராமன் சாலை, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, ஜான் ஜானி கான் சாலை, சி.என்.கே. சாலை உள்ளிட்ட பல் வேறு பகுதிகளில் கொட் டுகிற மழையில் நேரில் ஆய்வு மேற்கொண்டு, சாலையில் தேங்கியிருந்த மழைநீரை விரைந்து அகற்ற அதிகாரிகளை அறிவுறுத்தினார். மற் றும் நிவாரணப் பணிகள் குறித்து கேட்டறிந்தார். 

பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், சென்னை மேற்கு மாவட்டச் செய லாளர் நே.சிற்றரசு எம்.சி., பகுதிச் செயலாளர் எஸ். மதன்மோகன், மாவட்ட துணைச் செயலாளர்கள் ஆர்.என்.துரை, வி.எஸ்.கலை, மாவட்ட மாண வரணி அமைப்பாளர் துபாய் விஜய், கமலா செழியன் எம்.சி. உள்ளிட் டோர் உடன் சென்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *