50 லட்சம் கையெழுத்துக்களை கடந்தது ‘நீட்’ விலக்கு இயக்கம்

1 Min Read

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்

அரசு, தமிழ்நாடு

 

சென்னை,டிச.5- நீட் விலக்கு வலியுறுத்தி  பெறப்படும் கையொப் பங்கள் இதுவரை 50 லட்சத் தைத் தாண்டி உள்ளதாக  அமைச்சரும் திமுக இளைஞரணிச் செயலருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித் துள்ளார்.

இதுகுறித்து அவர்  எக்ஸ் தளத்தில் வெளி யிட்ட பதிவில் கூறியிருப்ப தாவது:- நீட் விலக்கு வலியுறுத்தி, திமுக இளைஞரணி, மாண வரணி, மருத்துவர் அணி சார்பில் கையொப்ப இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. 50 லட்சம் கையொப்பங்களைப் பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அந்த இலக்கு குறிப்பிட்ட காலக்கெடுவிற் குள் அதிகரித்து இப்போது 55 லட்சத்தை தாண்டியுள்ளது.

இணையவழியில் 40 லட்சம், அஞ்சல் அட்டை வழியாக 15 லட் சம் என 55 லட்சம் கையொப்பங்கள் பெறப்பட்டுள்ளன. தொடர்ந்து, கையொப் பமிட்டு மக்கள் தங்களது நீட் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகிறார்கள். நீட் எதிர்ப்புணர்வு தமிழ்நாட்டில் பேரலையாய் திரண்டு இருக்கிறது என்பதற்கான சான்று இதுவாகும். குடியரசுத் தலைவர் ஒற்றைக் கையொப் பத்தைப் பெறுவதற்கு நாம் பெறும் இத்தனை லட்சம் கையொப்பங்கள் நீட் ஒழிப்பு வரலாற்றில் என்றும்  நிலைத்திருக்கும். தகுதி, தரம் என்று ஏமாற்றி நீட்டைத் திணிப்பவர்கள், அதற்கெதிரான ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களின் எண் ணத்தைப் புரிந்து கொள்ள வேண் டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *