இயற்கை மருத்துவ அறிவியல் மாநாடு

1 Min Read

சென்னை, டிச.3 சென்னை அய்.அய்.டி ஆராய்ச்சி பூங்காவில் வரும் இன்று (3.12.2023)   பன்னாட்டு ஹோமியோபதி அறக்கட்டளை, டாக்டர் கோபிக்கர் ஹோமியோபதி அறக்கட்டளை மற்றும் விஜ்நான பாரதி  அமைப்புகள் இணைந்து மெடிசினா பியூச்சரா என்னும் பன்னாட்டு ஹோமியோபதி மாநாட்டை நடத்தவுள்ளது. 

உலகம் முழுவதும் நடைபெற்று வரும் 2023 மற்றும் 24ஆம் ஆண்டுக்கான ஹோமியோபதி அறிவியல் மாநாடு நிகழ்வுகளின் தொடர்ச்சியாக நடைபெறும் இந்த மாநாடு தற்போது சென்னையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் நாடு முழுவதும் உள்ள ஹோமியோபதி மருத்துவர்கள், ஆலோச கர்கள், பேராசிரியர்கள், பல்வேறு மருத்துவ அமைப் புகள், மாநில மற்றும் ஒன்றிய அரசு அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

இதுகுறித்து பன்னாட்டு ஹோமியோபதி அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் ஜெயேஷ் வி சங்வி பேசுகையில்,  இம்மாநாடு  பாதுகாப்பான, பயனுள்ள, நிதி ரீதியாக சாத்தியமான மற்றும் நெறிமுறையான சுகாதார தீர்வுகளை வழங்குவதை உறுதிப்படுத்துவதற்கான ஒரு முன்முயற்சியாகும். இந்திய ஹோமியோபதி சிகிச்சை, நோய் தடுப்பு, ஆரோக்கியம். தேசிய மற்றும் உலகளாவிய சுகா தாரத்திற்கான முன்மாதிரியாக முக்கிய நீரோட்டத் தில் உள்ளது. விவசாயம் மற்றும் கால்நடைத் துறை களில் ஹோமியோபதியின் பரந்த நோக்கத்தையும் இம்மாநாடு வெளிப்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *