தகைசால் கி.வீரமணி ஆசிரியரின் 91 டிசம்பர் 2இன் பிறந்த தின – கவிமலர் – நல்வாழ்த்து

1 Min Read
திராவிடர் கழகம், மற்றவை

முத்தமிழ் திராவிடத்தாய் மடிதவழ்ந்த

மூதறிஞர் கி.வீரமணி-ஆசிரியர் மண்ணுதித்த

தித்திக்கும் பிறந்தநாளில் சிரமுயர்த்தி – வாழ்த்துகிறேன்.. 

திராவிடர்கள் உலகோரின் மூளை விலங்குடைத்த – போராளியே!

பத்தொன்பதின் இளைஞனாய் பவனிவரும் – பகுத்தறிவு பகலவனே!

பசுந்தமிழர் “நீதியாட்சி” அடித்தளமே – உமக்கு

எத்தனை பிறந்தநாள் இனிவரினும்

எப்போதும் பிறந்தாண்டே  “நூறு” – என வாழ்த்துவதால்

இணையருடன் இருநூறாய் தொடர்ந்திடவே-இதய வாழ்த்து!

நித்தமும் பெரியாரின் சிந்தனையை-உலகின்

நிலம்யாவும் விதைத்திடும் பகுத்தறிவு-நன்செயல்-உழவனே! 

மொத்தமாய் பார்ப்பனிய-பாசிச சனாதன களை ஒழிக்கும் போராளியே!

மோதிடும் “சமூகநீதி” காத்திடும்-ஏவுகணையே!

அத்தனை மனிதனும் சமத்துவம் பெற்றிட

அனைத்து ஜாதியோர் அர்ச்சகராக்கிய-நீங்கள்

வித்தாய் விதைத்த பெரியாரியலே-இன்று-உலகே

விரும்பிடும் நீதியாட்சி திராவிட-மாடலாட்சி

எத்தனைதான் அறிவியலார்படைப்பு இருந்தென்ன?

எல்லோர்க்கும் சுகவாழ்வு-சுதந்திரம் தந்தது-பொரியாரியலே…

மூத்தவர் திராவிட-தமிழனே பிறப்பால்-அறிவால்-உலகிலிதை 

முந்திவிட இன்றுவரை எவருமே பிறந்திட வில்லை

பத்துவயதின் பகுத்தறிவு படைப்பாளி – ஆசிரியர்

பார்போற்றும் கி.வீரமணி பேருழைப்பும், சிந்தனையும்

பல்லாண்டு தொடர்ந்திட நலம் வாழ இதயவாழ்த்து

பகுத்தறிவு கவிஞர் அமிர்தம், 

வாழப்பாடி

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *