மசோதாக்களை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பது என்பது காலத்தை இழுத்தடிப்பதே!

Viduthalai
2 Min Read

தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

அரசு, தமிழ்நாடு


சென்னை, டிச. 03-
  சட்டப்பேரவை யில் மீண்டும் நிறைவேற்றி அனுப் பிய 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் இழுத்தடிக்கவே குடியர சுத் தலைவருக்கு ஆளுநர் அனுப் பியுள்ளதாக சட்டத்துறை அமைச் சர் எஸ்.ரகுபதி குற்றம்சாட்டி யுள்ளார்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில், முதலமைச்ச ருடன் பேசி தீர்வு காணும்படி உச்ச நீதிமன்றம் ஆளுநருக்கு அறிவுரை வழங்கியுள்ளது.

இந்நிலையில், 1.12.2023 அன்று சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற கணினி அறிவியல் தொழில்நுட்பம் தொடர்பான நிகழ்ச் சியில் பங்கேற்ற சட்டத்துறை அமைச் சர் எஸ்.ரகுபதி, பின்னர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

சட்டப்பேரவையில் 10 மசோ தாக்களை நிறைவேற்றி அனுப்பி னோம். அதை திருப்பி அனுப் பும்போது, இன்னென்ன கார ணங்கள் என்று தெரிவித்திருந்தால், அவற்றுக்கான விளக்கங்களை தந்து, மசோதாக்களை நிறைவேற்றி திருப்பி அனுப்பியிருப்போம். 

ஆனால், அப்போது காரணங் கள் தெரிவிக்காமல், தற்போது சட்டப் பேரவையில் மீண்டும் நிறைவேற்றி திருப்பிஅனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் தர வேண்டிய கட்டாயத்தில் இருக் கும் நிலையில், அதற்கு ஒப்புதல் தராமல் இழுத்தடிக்கும் விதமாக, ஒன்றிய உள்துறை அமைச்சகம் வாயிலாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பியிருப்பதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.

தன்னிடம் உள்ள அதிகாரம் பறிபோகக் கூடாது என்ற எண் ணம் ஏன் அவருக்கு வருகிறது என்பது தெரியவில்லை. மாநில அரசுக்கு துணைவேந்தரை நியமிக் கும் அதிகாரம் கூடாது என்று நினைப்பது எந்த அடிப்படையில் நியாயமானது என்பதும் புரிய வில்லை.

மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு, முதலமைச்சர் ஒரு குழுவை நியமிக்கும்போது, அதில் ஆளுநர் மற்றும் அரசின் பிரதிநிதிகள் மற்றும் சிண்டிகேட் பிரதிநிதியும் உள்ளார். அந்த தேடுதல் குழுதான் 3 பேரை பரிந்துரைக்கிறது. அதில் ஒருவரை தேர்வு செய்ய வேண்டும். 

அவரை ஆளுநர் தேர்வு செய்வ தற்கு பதில், அரசு தேர்வு செய்ய வேண்டும் என்பதில் என்ன தவறு இருக்கிறது.

மக்கள் உரிமை பறிக்கப் படாமல் ஜனநாயகம் பாதுகாக் கப்பட வேண்டும் என்பதற்காக நாங்கள் மசோதாக்களை நிறை வேற்றி அனுப்பியுள்ளோம். 

சட்டப்பேரவை செயலருக்கு பணி நீட்டிப்பு என்பது அரசின் முடிவு, விமர்சனங்களுக்கு பதில ளிக்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *