விளையாட்டுத் துறையில் தமிழ்நாட்டுக்கு விருது – அமைச்சர் உதயநிதி பாராட்டு

Viduthalai
1 Min Read

அரசு, தமிழ்நாடு


சென்னை, டிச .3
தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம் பாட்டுத் துறையின் கீழ் உள்ள தமிழ்நாடு விளை யாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு இந்திய தொழில் கூட்டமைப்பு சார் பில் 2023-க்கான விளை யாட்டை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலம் என்ற விருது வழக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டா லின் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘இந்த அங்கீகாரம், தமிழ்நாட்டு விளையாட்டு  வாகையர்களை  உருவாக்கி வளர்ப்பதற்கு நமது திரா விட மாடல் அரசு மேற் கொண்ட முயற்சிகளுக்கு ஒரு சான்றாகும். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முயற்சி களை அங்கீகரித்ததற்காக இந்திய தொழில் கூட்ட மைப்புக்கு நன்றி தெரி விக்கிறேன்’ என குறிப் பிட்டுள்ளார். இந்த விருது டில்லியில் நடைபெறும் இந்திய தொழில் கூட்ட மைப்பின் தொழில் மற்றும் விளையாட்டு துறை சார்ந்த ஸ்கோர்க்கார்ட் கருத்தரங் கத்தின் 8-ஆவது பதிப்பில் வழங்கப்பட உள்ளது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் முக்கிய விளையாட்டு நிகழ் வுகளை நடத்துவதிலும், உள்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும், விளையாட்டு வீரர்களின் நலன் காப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *