விளையாட்டுத் துறையில் தமிழ்நாட்டுக்கு விருது – அமைச்சர் உதயநிதி பாராட்டு

1 Min Read

அரசு, தமிழ்நாடு


சென்னை, டிச .3
தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம் பாட்டுத் துறையின் கீழ் உள்ள தமிழ்நாடு விளை யாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு இந்திய தொழில் கூட்டமைப்பு சார் பில் 2023-க்கான விளை யாட்டை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலம் என்ற விருது வழக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டா லின் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘இந்த அங்கீகாரம், தமிழ்நாட்டு விளையாட்டு  வாகையர்களை  உருவாக்கி வளர்ப்பதற்கு நமது திரா விட மாடல் அரசு மேற் கொண்ட முயற்சிகளுக்கு ஒரு சான்றாகும். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முயற்சி களை அங்கீகரித்ததற்காக இந்திய தொழில் கூட்ட மைப்புக்கு நன்றி தெரி விக்கிறேன்’ என குறிப் பிட்டுள்ளார். இந்த விருது டில்லியில் நடைபெறும் இந்திய தொழில் கூட்ட மைப்பின் தொழில் மற்றும் விளையாட்டு துறை சார்ந்த ஸ்கோர்க்கார்ட் கருத்தரங் கத்தின் 8-ஆவது பதிப்பில் வழங்கப்பட உள்ளது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் முக்கிய விளையாட்டு நிகழ் வுகளை நடத்துவதிலும், உள்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும், விளையாட்டு வீரர்களின் நலன் காப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *