ஆசிரியர் அவர்களின் அனுபவமும், வழிகாட்டுதலும் இளம் தலைமுறைக்கு உறுதுணை புரியும்!

1 Min Read

அமைச்சர் உதயநிதி வாழ்த்து!

அரசு, ஆசிரியர், தமிழ்நாடு

தி.மு.க. இளைஞரணி மாநில செயலாளர், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், இனமானப் பேராசிரியரைத் தொடர்ந்து, இப்போது நம் கண்முன் வாழும் திராவிட இயக்கத்தின் மூத்தத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் ‘தகைசால்’ தமிழர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்ட ஆசிரியர் அய்யா கி.வீரமணி அவர்களுக்கு 91ஆம் ஆண்டு பிறந்தநாள் வாழ்த்துகள்!

பத்து வயதில் தொடங்கி 81 ஆண்டுகளாக ஓய்வின்றி சமுதாயப் பணிகளில் ஈடுபட்டுவரும் ஆசிரியர் அவர்களின் அனுபவமும், வழிகாட்டுதலும் ‘திராவிட மாடலை’ அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல இளம் தலைமுறைக்கு உறுதுணை புரியும். நம் ஆசிரியருக்கு இனிய வாழ்த்துகள்!

-இவ்வாறு தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *