வானமும் பூமியும் வாழ்த்தட்டும்!

1 Min Read

கவிஞர் கலி.பூங்குன்றன்

ஞாயிறு மலர்

தொன்மைப் பழைமை

தொங்கு சதைகளை

சாம்பலாக்கும்

சூரிய வெப்பம்!

எண்பதாண்டுப்

பொதுத் தொண்டின்

கடலில் மிதக்கும்

தெப்பம்!

தொண்ணூற்றொன்றில்

தொடர்கிறார்

அகவை வாய்ப்பாட்டில்!

தொகை தொகையாக

நூல்கள் எப்பொழுதும்

அவர் தலைமாட்டில்!

அவர் பேசமாட்டார்

ஆதாரங்களே பேசும்

ஆடிக் காற்று போல்

ஆவேசமாய் வீசும்!

பிள்ளைப் பருவத்தில்

தொடங்கிய பிரச்சாரம்

கொள்கைப் பகை மீது

பாயும் மின்சாரம்!

‘தந்தை பெரியார்

தந்த புத்தி!’

என்றே சொல்வார்

தாக்க வரும்

தர்க்கங்களை

அந்த ஆயுதத்தால்

வெல்வார்!

மதவாத அரசியல்

‘கரோனா’

பரவும் காலம்!

கிருமிகளைக்

கொன்றொழிக்கும்

ஈரோட்டுப் பாணம்

ஒன்றே தீர்வென்று

இந்தியாவே

கொள்முதல் செய்யும்

புதிய திருப்பத்தை

உருவாக்குவது

இவரின் ஞானம்!

“தகைசால் தமிழர்”

என்று

உச்சிமோந்து

முத்தமிடுகிறது

தமிழ்நாடு அரசு!

அடைகாக்கும்

தாய்க்கோழியாம்

தமிழர் தலைவர்

வாழ்வின் நீட்சி

சமூகநீதிக்கான

மீட்சி!

நூற்றாண்டும் கடந்து

வாழ்வது

அவருக்காக அல்ல

நாட்டின் நலனுக்காக!

வாழ்வார் – வாழ்ந்து

காட்டுவார்!

“வீரமணி வென்றிடுக

வெற்றிமணி ஒலித்திடுக!”

என்றார்

முத்தமிழ் அறிஞர் கலைஞர்!

வாழ்க தலைவர்

வீரமணி!

வானமும், பூமியும்

வாழ்த்தட்டும்!

அந்தக் கழனியில்

மக்கள் நலனும்

வளமும்

செழிக்கட்டும்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *