ஆதிதிராவிடர் குடியிருப்புகள் மேம்பாடு- வரும் 5 ஆண்டுகளில் 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் “அயோத்திதாசப் பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம்”

1 Min Read

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதப்பதிவு

சென்னை,டிச.2– தமிழ்நாடு முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, 

தமிழன் _ திராவிடன் ஆகிய இரண்டையும் அரசியல்களத்தில் அடையாளச் சொற்களாக மாற் றிய ‘திராவிடப் பேரொளி’ அயோத்திதாசப் பண்டிதர் அவர் களின் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்ட பத்தை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் திறந்து வைத்தேன்.

அயோத்திதாசரின் நூல்கள் நாட்டுடைமை, ரூ.10 லட்சம் பரிவுத்தொகை வழங்கல்,  அயோத்தி தாசர் அஞ்சல் தலை வெளியீடு, அவர் நடத்திய தமிழன் இத ழுக்கு நூற்றாண்டு விழா  மற்றும் அவர் பெயரிலான சித்த மருத் துவ ஆராய்ச்சி மய்யத்துக்கு நிலம் ஆகியவற்றை நிறைவேற்றியது தி.மு.க ஆட்சியே!

ஆதி திராவிடர் குடியிருப்பு களை மேம்படுத்த “அயோத்திதாசப் பண்டிதர் குடியிருப்புகள் மேம் பாட்டுத் திட்டம்” வரும் அய்ந் தாண்டுகளில் 1000 கோடி ரூபாய் செலவில் நமது திராவிட மாடல் அரசால் செயல்படுத்தப்பட உள் ளது. புத்தரை ‘இரவு பகலற்ற ஒளி’ எனப் போற்றிய பண்டிதரின் சிந்த னைகளும் அத்தகைய ஒளியாகத் தமிழ்ச் சமுதாயத்துக்குப் பயன் படட்டும்!

-இவ்வாறு அப்பதிவில் முதல மைச்சர் குறிப்பிடப்பட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *