திராவிடர் கழகத்தின் நாகை மாவட்ட விவசாய அணி செயலாளர் அ.தங்கராசு மறைவிற்கு இரங்கல்!

1 Min Read

அரசியல்

கீழ்வேளூர் ஒன்றியத்தில், திராவிடர் கழகத்தில் மிகச் சிறப்பாக பணியாற்றியவரும், பல்வேறு பொறுப்புகளில் இருந்து தலைமை அறிவிக் கின்ற அத்தனைப்  போராட் டங்களிலும்,  ஆர்ப்பாட்டங்களி லும் களத்தில் நின்றவரும்  பலமுறை சிறை சென்றவரும், விவசாய தொழிலாளர்களை ஒருங்கிணைக்கின்ற  பணியை செய்தவருமான நாகை மாவட்ட விவசாய அணி செயலாளர் மானமிகு அ. தங்கராசு (வயது 87) வயது மூப்பின் காரணமாக நேற்று மதியம் (27.10.2023) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்து கிறோம்.

அவர் பிரிவால்   வாடும் அவரது மகன் த.ஞான சம்பந்தம், உறவினர்கள் மற்றும் கழகத் தோழர் களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், மறைந்த பெரியார் பெருந்தொண்டருக்கு வீர வணக்கத்தையும் தெரி வித்துக் கொள்கின்றோம். 

கி.வீரமணி

தலைவர், 

திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *