இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு மாநாடு

1 Min Read

சென்னை, டிச.1 வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்திய இளைஞர்களின் ஆற்றல் மிக்க மனங்கள் ஒருங்கிணைகின்ற ஒரு செயல்தளமாக சென்னையில்  டிசம்பர் 21, – 22 தேதிகளில் நடைபெறவுள்ள “டேக் பிரைட் 2023” _ 20ஆவது தேசிய உச்சி மாநாடு அதிக எதிர்பார்ப்புகளை உரு வாக்கியுள்ளது.

 இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் (சிஅய்அய்) இளையோர் பிரிவான யங் இந்தி யன்ஸ்  (சீவீ)  தேசத்தின் வளர்ச்சிக்காக இளம் தலைவர்களது திறன் மற்றும் ஆக்க பூர்வ மாற்றத்திற்கான கலந்துரையாடலை ஊக்குவிக்கும்  முயற்சியாக இந்த இரு நாள் மாநாடு, சென்னையில் அய்டிசி கிராண்ட் சோழா வளாகத்தில் நடத்தப் படவிருக்கிறது.

 இந்த உச்சிமாநாட்டின் 20ஆவது பதிப்பு இளையோரின் தலைமைத்துவ பண்பு, தேசத்தின் கட்டமைப்பு மற்றும் சிந்தனையில் தலைமைத்துவம் என்பது மீது கவனம் செலுத்தும். 

தமிழ்நாடு அரசின்  தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தொழில்துறை அமைச்சர்  டி.ஆர்.பி. ராஜா, ஜி20 மாநாட்டின் ஷெர்பா  அமிதாப்காந்த், தொழில் துறையின் பிரபல  ஆளுமைகள் இதில் பங்கேற் கிறார்கள். 

இந்த தகவலை  யங் இந்தியன்ஸ் (சீவீ) அமைப்பின் தேசிய தலைவர்   திலீப் கிருஷ்ணா  தெரிவித் துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *