தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 91ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திராவிடர் கழகத்தினுடைய மாநில தொழிலாளர் அணி செயலாளர் திருச்சி மு.சேகர், நகர்ப்புற வளர்ச்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் மாண்புமிகு. கே.என்.நேரு அவர்களை சந்தித்தபோது அமைச்சர் அவர்கள் ஆசிரியர் அவர்களுக்கு பிறந்தநாள் பரிசாக 100 விடுதலை ஆண்டு சந்தாக்களை (ரூ.2,00,000) வழங்கினார். திருச்சி முபாரக், ஜெயில்பேட்டை குணசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
தமிழ்நாடு அமைச்சர் கே.என்.நேரு 100 ‘விடுதலை’ சந்தாக்களுக்கான நன்கொடை ரூ.2 லட்சம் வழங்கினார்
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books