சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் படத்திறப்பு

1 Min Read

சென்னை, நவ.30- பெரியார் – அண்ணா – கலைஞர் பகுத்தறிவு பாசறையின் சார்பில் சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் படத் திறப்பு கொரட்டூர் தொடர் வண்டி நிலைய சாலையில் உள்ள தி.மு.க. கிளைக் கழக அலுவலகத்தில் 397 ஆவது வார நிகழ்வாக 27.11.2023 திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு இளவரசன் (ஆ.மா.தி.க.செ) ஏ.கண்ணன் (ஆ.மா.தி.க.இ.செ) முன் னிலையில் பாசறை  ஒருங்கிணைப் பாளர் இரா.கோபால் அழைப்பில் தி.மு.க 84ஆவது வட்ட செயலாளர் த.வ.லால், வி.பி.சிங் படத்தை அம்பத் தூர் தெற்கு பகுதி தி.மு.க. பொருளா ளர் கு.சங்கர் தலைமையில், திறந்து வைத்தார். நிகழ்வில் ஏ.கோபி (காங்), கருப்பசாமி, ஆறுமுகம், ஜெயசீலன், நாவரசு, ஹரிதாஸ், மீன்குமார், திரு நாவுக்கரசு, சாம்சுந்தர், சசிகுமார், சரத்குமார், சாமிக்கண்ணு, அரவிந் தன் ஆகியோர் கலந்து கொண் டனர். இறுதியில் கார்த்தி நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *