இடைப்பாடி நகர கழக கலந்துரையாடல் கூட்டம்

Viduthalai
1 Min Read

இடைப்பாடி, நவ. 30- இடைப்பாடி நகர திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 11.11.2023 அன்று காலை 10.30 மணியளவில்  ஒரத்தநாடு கை.முகிலன் – செல்வமணி முகிலன் இல்லத்தில் நடைபெற்றது.

திராவிடர் கழக மேட்டூர் மாவட்ட செயலாளர் ப.கலைவாணன் தலைமையில், கை.முகிலன், ராணி ரவி, கை.அறிவுமணி, மேட்டூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சி.மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேட்டூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இடைப்பாடி கோ.வி.அன்புமதி தொடக்கவுரை ஆற்றினார். தலைமை கழக அமைப்பாளர் கா.நா. பாலு நோக்கவுரையாற்றினார். மாநில மகளிர் பாசறை தலைவர் ஊ. தமிழ்செல்வி சிறப்புரை ஆற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் மகளிர் மற்றும் மாணவிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், வருகின்ற டிசம்பர் 2ஆம் தேதி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவதெனவும், விடுதலை நாளிதழ் சந்தா சேர்ப்பதெனவும், கலைஞரின் நூற்றாண்டு விழாவினை சிறப்பாக கொண்டாடுவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

புதிய பொறுப்பாளர்கள்: நகர கழகத் தலைவர் – சா.ரவி, நகர செயலாளர் – சி. மெய்ஞானஅருள், துணைத் தலைவர் – ஆர்.எம்.சண்முகசுந்தரம், தந்தை பெரியார் மய்ய பொறுப்பாளர் – மெ. காமராஜ், ப. ராமலிங்கம், ஆ. சத்தியநாதன் ஆகியோர் புதிய பொறுப்பாளர்களாக கா.நா.பாலு (தலைமை கழக அமைப்பாளர்) அவர்களால் நியமிக்கப்பட்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *