கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read

30.11.2023

டெக்கான் கிரானிக்கல்,சென்னை

* மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத விவகாரம்; ‘ஆளுநர் மற்றும் முதலமைச்சர் சந்திக்கட்டும். அவர்கள் அந்த விவகாரம் குறித்து பேசி முடிவெடுக்கட்டும். ஆனால் வழக்கு தொடுக்கப் பட்டுள்ளது. அவ்வாறு அரசியல் தீர்வு எட்டவில்லை என்றால் அரசியல் சாசனப்படி முடிவெடுப்போம்: கேரள வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி.

* சென்னை மாநகராட்சி பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் வழங்க தனியாருக்கு குத்தகை – கம்யூனிஸ்ட் கட்சிகளின் எதிர்ப்பை மீறி தீர்மானம் நிறைவேற்றம்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

*”வடகிழக்கில் நிரந்தர அமைதியை நிலைநாட்ட பிரதமரின் இடைவிடாத முயற்சிகள்” என்ற அமித் ஷாவின் பேச்சுக்கு – ஒரு முறை பயணம் மேற்கொண்டதையே வட கிழக்கில் அமைதி ஏற்பட்டு விட்டதாக ஷா கூறுவதாக – காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கிண்டல்.

* மணல் கொள்ளை வழக்கில் அமலாக்க இயக்குநரகம் எங்களை மோசமாக நடத்தியதாக தமிழ்நாடு நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.

தி டெலிகிராப்

* மல்லிகார்ஜுன் கார்கே குறித்த புத்தக வெளியீட்டு விழாவில், அனைத்துப் பேச்சாளர்களும் – சோனியா காந்தி, தி.மு.க.வின் டி.ஆர்.பாலு, சி.பி.எம். கட்சியின் சீதாராம் யெச்சூரி, ஆர்.ஜே.டி.யின் மனோஜ் ஜா – இந்த கடினமான காலங்களில் தலைமைப் பொறுப்புக்கு அவர் தகுதியானவர் என புகழாரம்.

* தற்போதுள்ள குற்றவியல்-தண்டனைச் சட்டங்களை மாற்றியமைப்பது அரசியலில் நீண்டகால தாக்கங்களை ஏற்படுத்தும். எனவே அனைத்துத் தரப்பினரிடத்தும் ஒருமித்த கருத்தை உருவாக்குங்கள் என உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எழுதிய கடிதத்தில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா வலியுறுத்தியுள்ளார்.

டைம்ஸ் ஆப் இந்தியா

* 2024 தேர்தலை முன்னெடுப்பதற்கு காங்கிரசின் மீது இந்தியா கூட்டணி முழு நம்பிக்கை வைத்துள்ளது என தலைவர்கள் பேச்சு.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *