தமிழ்நாடு மீனவர்கள் 12 பேர் கைது: மாலத்தீவு கடற்படை வேட்டை

Viduthalai
1 Min Read

தூத்துக்குடி, அக். 28- தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 மீனவர்களை மாலத்தீவு நாட் டின் கடற்படையினர் கைது செய்துள்ள நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது, இலங்கை கடற்படையினராலும், கடற்கொள்ளையர்களாலும் அடிக்கடி தாக்கப்படுவது, கைது செய்யப்படுவது  நடந்து வருகிறது.

இப்படி எல்லை தாண்டி மீன் பிடித்த தாகக் கூறி தமிழ்நாடு மீனவர் கள் கைது செய்யப்படுவதற்கு தமிழ் நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்து, மீனவர்களை விடு விக்க பல நடவடிக்கைகள் எடுத்து வருகி றது. இந்த நிலையில்,  நேற்று (27.10.2023) தூத்துக்குடி மாவட்டம் தரு வைக்குளம் பகுதியில் இருந்து ஆழ் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 12 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி மாலத்தீவு நாட்டின்  கடற்படையினர் கைது செய்துள்ளனர். இந்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *