“தமிழ்நாட்டில் நடைபெற்ற 9 குண்டு வீச்சு சம்பவங்களிலும் பா.ஜ.க.வுக்கு தொடர்பு உள்ளது..” சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு

Viduthalai
2 Min Read

அரசியல்

சென்னை,அக்.28- சென்னை ராஜ்பவனில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகை நுழைவாயில் முன் கடந்த 25ஆம் தேதி 2 பெட்ரோல் குண்டுகள் வீசப் பட்டது. இந்த விவகாரத்தில் அங்கு பணியில் இருந்த காவலர் கள் பெட்ரோல் குண்டு வீசிய வினோத் என்ற கருக்கா வினோத்தை மடக்கி பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவர் மீது 5 பிரிவு களின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

இந்த சூழலில் தமிழ்நாட்டில் கடந்த 12 ஆண்டுகளில் நடை பெற்ற 9 குண்டு வீச்சு சம்பவங் களிலும் பாஜக மற்றும் இந்து மக்கள் கட்சியினருக்கு தொடர்பு உள்ளதாக சட்டப் பேரவைத் தலை வர் மு.அப்பாவு தெரிவித்துள்ளார்.

நெல்லையில் பள்ளி கல்வித் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டப்பேரவை தலைவர் தலைவர் மு.அப்பாவு கலந்துகொண்டார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆளுநர் மாளிகை குண்டு வீச்சு சம்பவத்தில் பின்னணி யில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும் என்றார்.

இதுகுறித்து அவர் பேசு கையில், “தமிழ்நாட்டில் கடந்த 12 ஆண்டுகளில் 9 பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடை பெற்று உள்ளது. ஒன்பது சம்ப வங்களையும் நிகழ்த்தியது பா.ஜ.க. மற்றும் இந்து மக்கள் கட்சியை சார்ந்தவர்கள். கட்சி யில் முக்கியத்துவம் கிடைக்க வேண்டும் என்பதற்காக திட்ட மிட்டு குண்டு வீச்சு சம்பவத்தை நிகழ்த்தியுள்ளனர்.

இது காவல்துறை விசார ணையில் தெரியவந்துள்ளது. ஆளுநர் மாளிகை அருகே 10 ஆவதாக சம்பவம் நடைபெற் றுள்ளது.

தமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட எந்த கட்சிகளும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டது கிடையாது. ஆளுநர் மாளிகை குண்டு வீச்சு சம்பவத்தின் பின்னணியில் யார் இருக்கி றார்கள் என்பது குறித்து விரி வான விசாரணை மேற்கொள் ளப்படும்.

தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு கலவரங்களை ஏற்படுத்த வேண்டும் என நினைத்தால் அது நடக்காது.

ஆளுநர் மாளிகை அருகே நடைபெற்ற பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்திற்கு கண்ட னத்தை பதிவு செய்கிறேன். கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடு பட்ட கருக்கா வினோத் விவ காரத்தில் பா.ஜ.க.வினர் இரு பிரிவுகளாக செயல்பட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம். 

தமிழ்நாட்டில் வன்முறை சம்பவங்களை தூண்டுவதற்கு துடித்துக் கொண்டிருப்பவர்கள் யார் என்பது மக்களுக்கு தெரியும்.

அய்.பி.எஸ். அதிகாரிகள் இருவர் புட்டப் கேஸ், செட்டப் கேஸ் அதெல்லாம் போட வேண்டும் என தீவிரமாக இருக் கிறார்கள். அது தமிழ்நாட்டில் நடக்காது.

ஆளுநர் மாளிகை அருகே வெடிகுண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட நபரை தமிழ் நாடு காவல்துறையினர் முறையாக விசாரித்தால் உண் மையை சொல்லி விடுவார்களோ என்ற அச்சத்தில் சிபிஅய் விசாரணை கேட்கிறார்கள் என தோன்றுகிறது.” என்றார். 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *