உலக பக்கவாத நாளையொட்டி விழிப்புணர்வு பிரச்சாரம்

Viduthalai
1 Min Read

அரசியல்

சென்னை, அக்.28-  உலக பக்கவாத நாள் அக்டோபர் 29ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட உள்ள நிலையில், ‘நாம் ஒன்றிணைந்தால் பக்கவாதத்தைவிட வலிமைமிக்கவர்கள்’ என்னும் தலைப்பில் விழிப்புணர்வு குறித்து பிரசாந்த் மருத்துவமனை சார்பில் பிரச்சாரம் 4 நாள்கள் நடை பெற்றது. மாதவரம், புழல், அண்ணாநகர், அம்பத்தூர், பெரம்பூர் மற்றும் செனாய் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஏராளமான பொதுமக்களும் பங்கேற்று பக்கவாதம் குறித்த பல்வேறு விடயங்களை அறிந்து கொண்டனர்.

இந்த பிரச்சாரத்தின் முக்கிய நோக்கம் பக்கவாதம் வராமல் தடுப்பது, ஆரம்ப நிலையில் அதை கண்டறிந்து சரியான நேரத்தில் சிகிச்சை பெறுவது குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும். இதில் பல்வேறு சமூக தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த தன்னார்வலர்கள் பங்கேற்று பக்கவாதம் குறித்த விழிப்புணர்வு  பதாகைகளை கையில் ஏந்திச் சென்றனர்.

விழிப்புணர்வு பிரச்சாரம் குறித்து பிரசாந்த் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் பிரசாந்த் கிருஷ்ணா கூறுகையில், “உலக பக்கவாதம் தினத்தில் இந்த மிக முக்கியமான மற்றும் குறிப்பிடத்தக்க பிரச்சாரத்தை ஏற்பாடு செய்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். பக்கவாதத்தால் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் உயிர் இழக்கிறார்கள். பக்கவாதம் வந்தவர்கள் அதை முறையாக கையாண்டு அதற்கு தகுந்த சிகிச்சை பெறுவது அவசியம் ஆகும். பக்கவாதம் வராமல் தடுக்க ஆரோக்கியமான வாழ்க்கை முறை, வழக்கமான மற்றும் அவ்வப்போது சோதனைகள், சரியான உணவு பழக்கவழக்கம், ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டவுடன் உடனடி மருத்துவ சிகிச்சைகளை பெறுவது ஆகியவை குறித்து இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தின் மூலம் மக்களுக்கு எடுத்துச் சொல்லப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார். 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *