புகழ்பெற்ற தமிழர் நாகஸ்வர கலைஞர் எம்.பி.என்.பொன்னுசாமி மறைவு

Viduthalai
1 Min Read

தமிழ்நாடு

மதுரை, நவ. 29- ‘தில் லானா மோகனாம்பாள்’ திரைப்படப் புகழ் நாகஸ் வரக் கலைஞர் மதுரை யைச் சேர்ந்த எம்.பி.என்.பொன்னுசாமி காலமா னார். அவருக்கு வயது 91.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்பில் 1968இல் வெளியாகி வெற்றி பெற்றபடம், ‘தில் லானா மோகனாம்பாள்’. இதில் சிவாஜிகணேச னுக்கு நாகஸ்வரம் வாசிக் கும் நுட்பங்கள் குறித்து விளக்கியவர்கள், நாகஸ் வர கலைஞர்களான சேது ராமன்-பொன்னுசாமி சகோதரர்கள். படத்துக் காக நாகஸ்வரம் வாசித் தவர்களும் அவர்கள்தான்.

காரைக்குடியில் நடந்த திருமண நிகழ்ச்சி யில் இவர்கள் நாகஸ்வரம் வாசித்ததைக் கேட்டு ரசித்த இயக்குநர் ஏ.பி. நாகராஜன், ‘தில்லானா மோகனாம்பாள்’ படத் தில் வாய்ப்பை வழங்கி னார். அந்தப் படத்துக்குப் பிறகு ‘கோவில் புறா’ என்ற படத்தில் இசைக் கலைஞராக அவர் நடித்துள்ளார்.

சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, மாலத்தீவு உள் பட வெளிநாடுகளிலும் இவர்கள் இசை நிகழ்ச்சி களை நடத்தினர். பொன்னு சாமி, 9 வயதில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், தனது இசைப் பயணத்தைத் தொடங் கினார். சேதுராமன் 2000ஆம் ஆண்டில் கால மானார். இந்நிலையில், பொன்னுசாமி 27.11.2023 அன்று இரவு விளாங்குடி யில் உள்ள தனது மகன் வீட்டில் காலமானார். அவர் உடல் தத்தனேரி மின் மயானத்தில் நேற்று (28.11.2023) பிற்பகல் எரி யூட்டல் செய்யப்பட்டது.

மறைந்த பொன்னு சாமிக்கு மனைவி ருக் மணி, மகன்கள் நடராஜ சுந்தரம், மாரியப்பன், உமாமகேஸ்வரன், மகள்கள் பொன்னரசி, சம்பூர்ணம் உள்ளனர். பொன்னுசாமியின் மறைவுக்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது, கிருஷ்ண கான சபாவின் சங்கீத சூடாமணி விருது உள்பட பல்வேறு விருது களை பெற்ற இவர், 87 வயது வரை நாகஸ்வரம் வாசித்து வந்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *