கலைவாணர் பிறந்த நாளான இன்று நாகர்கோவிலில் உள்ள கலைவாணர் சிலைக்கு திராவிடர்கழக மாவட்டத் தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமையில் மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கலைவாணர் பெயரன் என்.எஸ்.கே.கே. இராஜன், கழக காப்பாளர் ஞா. பிரான்சிஸ், மாவட்ட துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள், இலக்கிய அணி செயலாளர் பா. பொன்னுராசன்; மாணவர் அணி செயலாளர் இரா.கோகுல் தோழர்கள் மற்றும் பெரியார் பற்றாளர்கள் பங்கேற்றனர்.