பிரபல நாகஸ்வர கலைஞர் எம்.பி.என்.பொன்னுசாமி மறைவு கழகத் தலைவர் இரங்கல்

1 Min Read

இரங்கல் அறிக்கை

பிரபல நாகஸ்வர இசைப் பேரறிஞர் கலை மாமணி மதுரை ‘சேது ராமன்’ பொன்னுசாமி  (வயது 91) அவர்கள் மறைவுற்றார் (27.11.2023) என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறோம்.

அவரது தந்தையைப் பெற்ற தாத்தா மேள கர்த்தாக்கள் 36ஆ 72ஆ என்ற ஆய்வில் “72 மேள கர்த்தாக்கள்” என தன் இசைத்திறத்தால் உறுதி செய்த பேரறிஞர். அத்தகைய பாரம் பரிய புகழ் பெற்றவர் எம்.பி.என். பொன்னுசாமி அவர்கள்.

‘தில்லானா மோகனாம்பாள்’ திரைப் படத்தில் அவரது வாசிப்பு என்றும் கேட்டு மகிழத்தக்கத் தகுதி பெற்று நிலைத்தது!

நாம் அவர்களை பெரியார் திடலில் அழைத்து கழகச் சார்பில் பாராட்டிப் பெருமைப்படுத்தினோம்.

அவரது மறைவால் இசை உலகமும், கலை உலகமும் பெரும் இழப்புக்குள்ளாகி உள்ளது.

அவரது மறைவால் வருந்தும் அவரது குடும்பத்தினர், இசை உலகினர் அனை வருக்கும் நமது ஆறுதலையும், மறைந்த கலைப் புலமை யாளருக்கு நமது ஆழ்ந்த இரங்கலையும் உரித்தாக்குகிறோம்.

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை
29.11.2023

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *