தமிழர் தலைவர் ஆசிரியரின் வாழ்த்துக் கடிதம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நன்றி!

1 Min Read

கடிதம், திராவிடர் கழகம்

கடந்த 27 ஆம் தேதி தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளாகும். அன்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பிறந்த நாள் வாழ்த்துச் செய்தியை ‘விடுதலை’யில் எழுதியிருந்தார்.

அச்செய்தி குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,

‘‘பெரி­யார் திட­லில் இன­மான ஆசி­ரி­யர் அய்யா அவர்­களை சந்­தித்து வாழ்த்து பெ­றச் சென்­றி­ருந்­தபோது, ‘திரா­விட இயக்­கக் கொள்கை ஜீவ­நதி உத­ய­நிதி அவர்க­ளுக்கு வாழ்த்து­கள்’ என்று இன்­றைய ‘விடு­தலை’ நாளி­த­ழில் அவர் தந்திருந்த என் பிறந்­த­நாள் வாழ்த்­துச் செய்­தியை என்­னி­டம் காண்பித்து மகிழ்ந்­தார்.

என்­னு­டைய கொள்­கைப் பிடிப்பை வரிக்கு வரி பாராட்டி எழு­தி­யி­ருந்த ஆசிரியர் அவர்­க­ளுக்கு நன்றி தெரி­வித்­தேன். அந்த வாழ்த்­துச் செய்­தி­யின் கடைசி­வ­ரியை, ‘வயது ஏறு­வது அவ­ருக்கு மூப்பு அல்ல முதிர்ச்­சியே’ என்று முடித்தி­ருந்­தார். இதைவாழ்த்­துக் கடி­தம் என்­ப­தை­விட, பெரி­யார் பேர­னுக்­கான பாட­மா­கவே எடுத்­துக்­கொள்­கி­றேன். இனமான ஆசி­ரி­யர் அவர்­க­ளுக்கு இனமான மாண­வ­னின் நன்றி என்று கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *