வைக்கம் போராட்டம் – பரிணாமம்!

Viduthalai
3 Min Read

வைக்கம் போராட்டம் 

தொடங்கிய நாள் 30.03.1924

கட்டுரை, திராவிடர் கழகம்

போராட்டத்தில் கலந்து கொண்ட 19 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் பெரியாருக்கு அழைப்பு வருகிறது.

போராட்டம் தொடங்கி 14ஆம் நாள். அதாவது 13. 4 .1924 அன்று. வைக்கம் வந்து சேர்ந்தார் பெரியார்.

வைக்கம் போராட்டத்தின் போது பெரியார் இரண்டு முறை கைது செய் யப்பட்டார்.

முதல் கைது: 22.5.1924 முதல் 21.06.1924 வரை அருவிக்குத்தி சிறைச்சாலை. 

சிறையில் இருந்த நாட்கள் 31

இரண்டாவது கைது: 18.07.1924 முதல் 31.08.1924 வரை திருவாங்கூர் சென்ட்ரல் ஜெயில் சிறைச்சாலை. 

சிறையில் இருந்த நாட்கள் 44

1924 மற்றும் 1925 ஆம் ஆண்டு களில் போராட்டத்திற்காக பெரியார் வைக்கம் சென்றது 7 முறை

பிரச்சாரம் செய்த நாட்கள் 67.

சிறையில் இருந்த நாட்கள் 74

வைக்கத்தில் எல்லாத் தெருக் களிலும், எல்லோரும் நடக்கலாம் என, திருவாங்கூர் அரசி ஆணை பிறப்பித்த நாள்: 21.11.1925

1925 நவம்பர் 21 மற்றும் 22 தேதி களில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாடு, வைக்கம் போராட்ட வெற்றிக்காகப் பெரியாருக்குப் பாராட் டுத் தீர்மானத்தை நிறைவேற்றியது. (தந்தை பெரியார் காங்கிரசிலிருந்து வெளியேறிய மாநாடும் இதுதான்)

வைக்கத்தில் வெற்றி விழாக் கூட்டம் நடைபெற்ற நாள்: 29.11.1925

தலைமை: மன்னத்து பத்மநாபன்.

தமிழ்நாட்டில் இருந்து கலந்து கொண்டவர் தந்தை பெரியார் மட்டுமே.

வைக்கம் பொன்விழா நடை பெற்ற நாள்: 26.4.1975

அன்னை மணியம்மையாரும், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீர மணியும் கலந்து கொண்டார்கள்.

தந்தை பெரியாரின் அரும் பணியைப் பாராட்டி ‘வைக்கம் வீரர்’ என்று பட்டம் கொடுத்தவர் திரு.வி.க.

*தமிழ்நாட்டில் மிக முக்கிய மான ஆய்வாளர்களில் ஒருவரான பழ.அதியமான் அவர்கள் எழுதிய ‘வைக்கம் போராட்டம்‘ என்ற தமிழ் நூலின் மலையாள மொழிபெயர்ப்பு வெளியிடப்படுகிறது.

*தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மற்றும் கேரளாவில் உள்ள டி.சி.பதிப்பகம் ஆகியவற்றின் கூட்டு வெளியீடாக இது வெளியிடப்படவுள்ளது. இந்த நூலின் கன்னட மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட பதிப்பை இன்று (29.11.2023) முதலமைச்சர் வெளியிட்டார்.

தந்தை பெரியார் பிறந்த 

நாளில் வைக்கம் விருது

கட்டுரை, திராவிடர் கழகம்

*எல்லை கடந்து சென்று வைக்கத்தில் போராடிய தந்தை பெரியார் அவர்களை நினைவு கூரும் வகையில், பிற மாநிலங் களில் ஒடுக்கப்பட்டவர்கள் நல னுக்காகப் பாடுபட்டு, குறிப்பிடத் தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் ஆளுமைகள் அல்லது நிறுவனங் களுக்கு ஆண்டுதோறும் வைக் கம் விருது சமூகநீதி நாளான செப்டம்பர் 17 ஆம் நாளன்று தமிழ்நாடு அரசால் வழங்கப்படும்.

*கேரள மாநிலம் வைக்கத் தில் அமைந்துள்ள பெரியார் நினை விடத்தை நவீனமுறையில் மறுசீர மைக்கவும், பெரியார் தொடர்பான நினைவுப் பொருட் கள் கூடுதலாக இடம் பெறுவ தற்கும் 8 கோடியே 14 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப் படும்.

*தந்தை பெரியார் கைது செய்யப்பட்டு முதன்முதலாக சிறை வைக்கப்பட்டிருந்த அருவிக் குட்டி கிராமத்தில் பெரியார் நினை விடம் ஒன்று புதிதாக உருவாக்க முயற்சிகள் மேற் கொள்ளப்படும்.

*வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நினைவாக சிறப்பு நினைவு அஞ்சல் தலை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்.

*தமிழ்நாட்டின் முக்கிய பல் கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி களில் வைக்கம் போராட்டம் தொடர் பான கருத்தரங்குகள் நடத்தப்படும். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் வினாடி – வினா உள்ளிட்ட போட்டிகளை நடத்திப் பரிசுகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப் படும்.

ஓராண்டு முழுவதும்…

* வைக்கம் போராட்ட நூற் றாண்டு குறித்த விழிப்புணர்வை மாணவர்களுக்குக் கொண்டு சேர்க் கக்கூடிய வகையில், 64 பக்க நூல் ஒன்று கொண்டுவரப்படும். அது தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மூலமாக வெளியிடப்பட்டு, விற்பனை செய் யப்படும். இந்த நூல், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒலிப்புத்தகமாகவும் வெளியிடப்படும். 10 வைக்கம் போராட்ட நூற்றாண்டு குறித்த சிறப்புக் கட்டுரைகள் பலவற்றை பல் வேறு அறிஞர்களிடமிருந்து பெற்று தொகுத்து வைக்கம் போராட்ட நூற் றாண்டு மலர் ஒன்று தமிழரசு பத்தி ரிகை மூலம் கொண்டு வரப்படும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *