தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (9.1.2023) தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்ற காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், மறைந்த சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா அவர்களின் உருவப் படத்தினை திறந்து வைத்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன் சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவர் கு.செல்வப்பெருந்தகை மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.