தொடரும் நிலவெடிப்பு: உத்தராகண்டின் ஜோஷிமத் நகரம் ‘பேரிடர் பகுதி’ ஆக அறிவிப்பு

2 Min Read

மற்றவை

சமோலி, ஜன. 10- உத்தராகாண்டின் ஜாஷிமத் நகர் பகுதியில் தொடர்ந்து நிலச்சரிவும், நிலவெடிப்பும் ஏற் பட்டு வரும் நிலையில், அப்பகுதி பேரிடர் ஏற் படும் பகுதி என அறி விக்கப்பட்டிருப்பதாக சமோலி மாவட்ட நீதி பதி தெரிவித்தார்.

இதுகுறித்து சமோலி மாவட்ட நீதிபதி ஹிமான்சு குரானா கூறு கையில், “ஜோஷிமத் பகுதி பேரிடர் ஏற்படும் பகுதியாக அறிவிக்கப்படு கிறது. ஜல்சக்தி அமைச்சகத்தின் குழு உட்பட ஒன்றிய அரசின் இரண்டு குழுக்கள் இங்கு வர இருக்கிறது. ஜோஷிமத், அதன் சுற்றுப்புற பகுதிகளில் கட்டுமானப் பணிகள் அனைத்தும் நிறுத்தப் பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு உணவுப் பொருள்கள் வழங் கப்பட்டுள்ளன. நிவாரண முகாம் களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கான அடிப்படை தேவை கள் மாவட்ட நிர்வாகத்தால் தொடர்ந்து கண்காணிக்கப்படுகி றது. தேவையானவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படு கின்றன. தேவையான பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆய்வுகள் மேற்கொண்டு வரு கிறது” என்று கூறினார்.

இதற்கிடையில், ஜோஷிமத் நகரத்தில் 603 கட்டடங்களில் தொடந்து வெடிப்பு ஏற்பட்டு வரு வதாகவும், மொத்தம் 68 குடும்பத் தினர் தற்காலிகமாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டிருப்பதா கவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாவட்ட பேரிடர் மேலாண்மை அமைப்பு வெளியிட்டுள்ள அறிக் கையில், “பேரிடர் மேலாண்மை சட்டம் 2005இ-ன் படி, மறுஉத்தரவு வரும் வரை, ஓட்டல் மவுண்ட் வியூ, மலாரி இன் ஆகிய இரண்டும் நடவடிக் கைகளை நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன. ஜோஷி மத் பகுதியில் தற்போது 229 அறைகள் மட்டுமே தற்காலிகமாக தங்குவதற்கு தகுந்தவை என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அதில், 1271 பேர் தங்க முடியும்.

பேரிடர் மேலாண்மை சட்டத் தின் பிரிவு 33, 34-இன் படி, உயிர் களுக்கும் உடைமைகளுக்கும் ஆபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையில், ஜோஷிமத் பகுதியில் நிலச்சரிவு ஏற்படும் ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் மக்கள் உட னடியாக அங்கிருந்து வெளி யேற உத்தரவிடப்பட்டுள்ளது.

மறு உத்தரவு வரும் வரை, தேசிய அனல் மின் நிறுவனத்தின் தபோவன் விஷ்ணுகாட் நீர் மின் திட்டத்தின் அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளன. அதேபோல், எல்லை சாலை அமைப்பால் மேற்கொள்ளப்பட்டுவரும் ஹோ ஹரே ஹெலாங் புறவழிச்சாலை அமைக்கும் பணிகளும், ஜோஷிமத் நகராட்சியால் மேற்கொள்ளப் பட்டு வரும் அனைத்து கட்டு மானப்பணிகளும் உடனடியாக நிறுத்தப்படுகின்றன” என்று தெரி விக்கப்பட்டுள்ளது.

நகரத்தில் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்புக்கான காரணங்கள் இன்னும் சரியாக தெரியவில்லை. தேசிய அறிவியல் மய்யத்தின் (அய்என்எஸ்ஏ) ஓய்வு பெற்ற விஞ்ஞானி டிஎம் பானர்ஜி, “நீர்மின் திட்டப்பணிகளுக்கு அருகில் அமைக்கப்பட்டு வரும் சாலைகள், சுரங்க கட்டுமானங்களுமே இந்த சிக்கலுக்கான காரணங்கள். ஜோஷிமத்தில் உள்ள பாறைகள் கேம்பிரியன் காலத்திற்கு முந்தை யவை. அந்த இடம் நில அதிர்வு பகுதி 4அய் சேர்ந்தது. இவைகள் தவிர 3,4 மாடிகள் கொண்ட பெரிய வீடுகள் இந்த பகுதிகளில் கட்டப்படக்கூடாது” என்று தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *