‘ஆளுநர் மாளிகை வட்டாரத் தகவல்’ என பத்திரிகைகளில் செய்தி!

Viduthalai
4 Min Read

உண்மையில் நடந்தது என்ன?

தமிழ்நாடு அரசு விளக்கம்!

‘உண்மையில் நடந்தது என்ன…? ஆளுநர் மாளிகை வட்டார தகவல்’ என்று பத்திரிக்கைகளில் வந்த தகவல்கள் குறித்து தமிழ்நாடு அரசின் விளக்கம்!

• அரசமைப்புச் சட்டத்தின்படி ஆளுநர் உரை என்பது Article 176இன் கீழ் ஆண்டின் முதல் சட்ட மன்ற கூட்டத்தில் நிகழ்த்தப்படும் ஒன்றாகும். இந்த உரை மாநில அரசின் கொள்கைகளையும், கோட்பாடு களையும், திட்டங்களையும், சாதனைகளையும் எடுத்துரைக்கும் ஓர் உரை ஆகும்.

• இந்த உரை மீது – ஆளுநர் உரைக்குப் பின், அதில் தெரிவிக்கப்பட்டுள்ள அரசின் கருத்துகள் மீது தீவிர விவாதங்கள் நடை பெறும். அனைத்துக் கட்சித் தரப்பினரும், ஆளுநர் உரையின் மீது தங்களது கருத்துகளைத் தெரிவித்து விவாதிப்பார்கள். எதிர்க் கட்சித் தலைவரும் அவரது உரையை இக் கூட்டத்தில் நிகழ்த்துவார். அதன்பிறகு, முதலமைச்சர் அவர்களும் அவரது பதிலுரையை நிகழ்த்துவார்.

• இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி அரசு தயாரிக்கும் இந்த உரையை ஆளுநர் வாசிக்க வேண்டும் என்பதே மரபு. இந்த உரையில் ஆளுநரின் தனிப்பட்ட கருத்துக்களுக்கோ, ஆட்சேபனைக ளுக்கோ எவ்வித இடமும் இல்லை. மேலும், இவ்வுரை அவரது தனிப்பட்ட உரையுமல்ல. அரசின் உரையே ஆகும். இந்த நடைமுறையை தொடர்ந்து பல ஆளு நர்கள் தமிழ்நாட்டின் சட்ட மன்றத்தில் கடைப்பிடித்து வந்துள்ளனர்.

• “வரப்புயர நீர் உயரும் நீர் உயர நெல் உயரும்…” என்கிற அவ்வையாரின் வரிக ளையும், பாரதியாரின் “வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர், வாழிய பாரத மணித்திருநாடு” என்கிற வரிகளும் நீக்கப்பட்டுள்ள தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

• அரசு தயாரித்த ஆளுநர் உரையில் “வரப்புயர நீர் உயரும் நீர் உயர நெல் உய ரும்…” என்கிற வரிகள் சேர்க்கப்படவில்லை, அவற்றை சேர்க்கவேண்டும் என்று ஆளுநர் அலுவலகத்திலிருந்து எந்தவிதமான கோரிக்கைகளும் பெறப்படவில்லை. ஆதலால் இவை நீக்கப்பட்டுள்ளன என்று கூறு வது சரியல்ல.

• “வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர், வாழிய பாரத மணித்திருநாடு” என்கிற பாரதியாரின் கவிதை வரிகளை பொறுத்தவரை அரசு தயாரித்த உரையில் சேர்க்கப்பட்டுள்ளன. ஆதலால் இவை நீக்கப் பட்டுள்ளது என்று சொல்வது சரியன்று.

• ஆளுநர் தெரிவித்த புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள், அச்சிடப் பட்ட உரையின் பத்தி 1 மற்றும் பத்தி 67இல் இடம் பெற்றிருந்தன. எனவே, அவை நீக்கப்பட்டன என்று கூறுவது சரியன்று.

• மேலும், மாண்புமிகு ஆளுநர் அவர் கள், அரசு தயாரித்த ஆளுநர் உரையில் ஆட்சேபணைக்குரிய பகுதிகளும், அரசு தன்னைத்தானே புகழ்ந்துகொள் ளும் பகு திகளும் இருப்பதால், சில பத்திகளை வாசிக்கவில்லை என்று கூறப்பட்டது. ஆனால் பத்தி 2இல். அண்மையில், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு வெளியிட்டுள்ள சமூக வளர்ச்சிக் குறியீட்டு அறிக்கையில் 63.3 புள்ளிகை ளைப் பெற்று, இந்தியாவின் பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

பத்தி 35இல், 28,232 கோடி ரூபாய் அந்நிய முத லீட்டை தமிழ்நாடு ஈர்த்துள்ளது என்று குறிப்பிடப் பட்டிருந்தது. இது, ஓரு தரவின் அடிப்படையிலான உண்மைத் தகவலாகும். இது, எந்த பிற மாநி லங்களையும் ஒப்பிட்டு, குறிப்பிடப்பட வில்லை. இவ்வாறான உண்மை நிகழ்வு களையே மாண்புமிகு ஆளுநர் அவர்கள் தனது உரையில் வாசிக்கவில்லை. தரவு களின் அடிப்படையிலேயே தயாரிக்கப் பட்ட உரையின் மேற்சொன்ன பகுதிகளை மாண்புமிகு ஆளுநர் வாசிக்கவில்லை.

வரைவு ஆளுநர் உரை அவரது ஒப் புதலுக்காக ஜனவரி 6ஆம் தேதி காலை சுமார் 11.30 மணிக்கு அவரது அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது. இதில், ஆளுநர் அலுவலகத்தின் ஒப்புதலுடன் சிறிய எழுத் துப் பிழைத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, ஜனவரி 6ஆம் தேதி மாலை சுமார் 4.30 மணிக்கு மீண்டும் திரும்ப அனுப்பப்பட்டது. இதன்பின், ஆளுநர் அலுவல கத்திலிருந்து, சில திருத்தங்களை மேற் கொள்ளுமாறு கூறினர். ஆளுநர் அலுவல கத்துடன் கலந்தாலோசித்து அத்திருத்தங்களை மேற்கொண்டு, இறுதியாக ஓர் உரை ஜனவரி 7ஆம் தேதி இரவு சுமார் 8.00 மணிக்கு அனுப்பப்பட்டது.

ஜனவரி 8ஆம் தேதி, காலை சுமார் 11.30 மணியளவில் மாண்புமிகு ஆளுநர் ஒப்புதலுடன் கோப்பு அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

ஆளுநர் சில பத்திகளை நீக்கக் கூறுமாறு கோரியபோது, உரை அச்சிற்குச் சென்றுவிட்டது என்று கூறியதும், எனவே, தாங்கள் உரையை வாசிக்கும்போது, அவற்றைத் தவிர்த்து வாசியுங்கள் என்ற வதந்தி தவறாகப் பரப்பப்பட்டு வருகிறது.

இது முற்றிலும் உண்மைக்குப்புறம்பானது. அவ்வாறு எந்த ஒரு நிகழ்வும் நடைபெறவில்லை என்பதே உண்மை. ஒவ்வொரு ஆண்டும் ஆளுநர் உரையாற்றிய நாளின் அதிகாலையி லேயே (சுமார் 12.30 மணியளவில்) உரை அச்சிடுவதற்கு அனுப்பப் படும். இது தான் கடைப்பிடிக்கப்படும் மரபு. இவ்வாண் டும் அவ்வாறே கடைப்பிடிக்கப்பட் டது. 8ஆம் தேதி காலை சுமார் 11.30 மணியளவில் ஆளுநரின் ஒப்புதல் பெறப் பட்ட கோப்பு பெறப்பட்டது. ஆனால், அர சின் சார்பில் ஆளுநர் உரை 9ஆம் தேதி அதி காலை சுமார் 12.30 மணியளவிலேயே அச்சகத்திற்கு அனுப்பப்பட்டது.

எனவே, உண்மை நிலை இவ்வாறிருக்கும் நிலை யில், தவறான தகவல்களையும், வதந்திகளையும், பத்திரிக்கைகளிலும், சமூக வலைதளங்களிலும் பரப்புவது சரியானதல்ல.

இவ்வாறு தமிழ்நாடு அரசின் சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

நன்றி: ‘முரசொலி’, 11.1.2023

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *