அருமனை, ஜன. 11- கன்னியா குமரி, அருமனை அருகே உள்ள மாலைக்கோடு பகுதியை சேர்ந்தவர் பிர தீஸ். இவர் தனது நிலத் தில் பலவிதமான கிழங்கு வகைகளை பயிரிட்டு வருகிறார். அதில் ஒன்று காச்சில் கிழங்கு. இந்த கிழங்கு ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் அறுவடைக்கு வந்து விடும். அதன்படி அறுவடைக்கு தயாரான காச்சில் கிழங்கு வெட்டி எடுக்கும் பணியில் பிர தீஸ் ஈடுபட்டார். அப்போது, கிழங்கு பூமிக்கு அடியில் ஆழமாக சென்றதை கண்டார். சுமார் 8 அடி ஆழத்தில் பல பிரிவு களாக சென்றிருந்த கிழங்கு முழுமையாக உடையா மல் பிரதீஸ் அறுவடை செய்தார். அதன் எடை 45 கிலோ இருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைந்தார். வழக்கமாக இந்த வகையை சேர்ந்த கிழங்கு ஒன்று அதிகபட்சமாக 20 கிலோ இருக்கும். ஆனால் இந்த கிழங்கு 2 மடங்கு எடையில் உள்ளது. இந்த கிழங்கை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த் துச் சென்றனர்.
45 கிலோவில் காச்சில் கிழங்கு
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books