இந்திய சந்தையில் ரூ.12,000-க்குள் திறன்பேசிகள்

2 Min Read

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் தற்போது ரூ.12,000-க்கும் குறைவான விலையில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்கள் குறித்து பார்ப்போம். இப்போது அனைவரும் யுபிஅய் மூலமாக அன்றாட வரவு செலவு சார்ந்த பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இந்தச் சூழலில் ஸ்மார்ட்போன்களுக்கு அப்டேட் ஆக விரும் பும் மொபைல்போன் பயனர்கள் மற்றும் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன்களை எதிர்பார்க்கும் பயனர் களுக்கும் இது உதவும்.

இந்த ஸ்மார்ட்டான டிஜிட்டல் யுகத்தில் வசித்து வரும் மக்களுக்கு அத்தியாவசியமானதாக உள்ளது ஸ்மார்ட்போன்கள். அது பள்ளி செல்லும் குழந்தைகள் தொடங்கி அனைத்து வயதினருக்கும் பொருந்தும். செல்போனை வடிவமைத்த மார்ட்டின் கூப்பர் கூட பின்னாளில் அதன் பரிணாம வளர்ச்சியானது இப்படி எல்லாம் இருக்கும் என கணித்திருக்கமாட்டார். அந்த அளவிற்கு மாறியுள்ளது செல்போன்.

‘ஹலோ’ சொல்வதில் தொடங்கி குறுஞ்செய்தி அனுப்ப, வீடியோ வடிவிலான உரையாடல் மேற் கொள்ள, பணம் அனுப்ப மற்றும் பெற, ஆன்லைன் டிக்கெட் புக் செய்ய, படம் பார்க்க, புத்தகம் வாசிக்க என ஸ்மார்ட்போன்களின் ஓட்டம் நீண்டு கொண்டே போகிறது.இந்தச் சூழலில் புத்தாண்டு பிறந்த கையோடு புதிய போன் வாங்க விரும்புபவர்களுக்கான வழி காட்டுதல்.

ரியல்மி சி35: இந்தியாவில் பட்ஜெட் விலையில் கிடைக்கும் மற்றொரு போன்தான் ரியல்மி சி35. 4ஜிபி ரேம் + 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மாடல் கொண்ட போனின் விலை ரூ.11,999. யுனிசாக் டி616 ப்ராசஸர், 50 மெகா பிக்சல் கொண்ட பிரதான கேமரா, 5,000னீகிலீ திறன் கொண்ட பேட்டரி, 18 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட் மற்றும் புள் ஹெச்டி டிஸ்பிளே கொண்டுள்ளது. சிறந்த கேமரா கொண்ட போன்களை எதிர்பார்த்துக் கொண் டிருப்பவர்களுக்கு இந்த போன் சரியான சாய்ஸாக இருக்கும்.

ரெட்மி 10: கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் சந்தையில் அறிமுகமான போன்தான் ரெட்மி 10. 4ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்டுகளில் இந்த போன் கிடைக்கிறது. இதன் விலை முறையே ரூ.9,999 மற்றும் ரூ.11,999. குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட், 6000னீகிலீ திறன் கொண்ட பேட்டரி, 6.71 இன்ச் டிஸ்பிளே, 18 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் சப்போர்டும் கொண்டுள்ளது. நீடித்த பேட்டரி மற்றும் தரமான பர்ஃபாமென்ஸை எதிர்பார்க்கும் பயனர்களுக்கு இந்த போன் உதவும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *