12.1.2023
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
* ஆளுநரின் உரை குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானம், அனைத்து சட்டமன்றங்களின் மாண்பையும் காத்துள்ளது என சட்டமன்ற தலைவர் அப்பாவு கருத்து.
தி டெலிகிராப்:
* ஆயுர்வேதத்தில் ஜோதிடத்தை அறிமுகப்படுத்துவது ஒரு பிற்போக்கு நடவடிக்கையாகும், இது ஆயுர்வேதத்தை நம்பிக்கை அடிப்படையிலான நடைமுறைகளுக்கு தள்ளு கிறது என்று ஹோமி பாபா உள்ளிட்ட விஞ்ஞானிகள் கவலை.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* பீகாரில் நடந்து வரும் ஜாதிவாரி கணக்கெடுப்பை நிறுத்த வேண்டும் என்பதில் பாஜக மறைமுகமாக உறுதியாக உள்ளது என அய்க்கிய ஜனதா தள கட்சி தலைவர் லாலன் சிங் குற்றச்சாட்டு.
* தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழ்நாட்டு ஆளுநரின் விருந்தினர் அலைபேசியில் படம் எடுத்த விவகாரம், சிறப்புரிமை பிரேரணை குழுவுக்கு அனுப்பப்பட்டது.
– குடந்தை கருணா