சென்னை,ஜன.12- தமிழ்நாடு சட்டப் பேரவையில், ஆளுநர் ஆர்.என்.ரவி உரைக்கு நன்றி கலந்த வருத்தமாக பதிவு செய்யப்பட்டது.
சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் தொடக்கத்தில் ஆளுநர் உரையாற்றிய பிறகு அவருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் உரை மீது அனைத்துக் கட்சி உறுப்பினர் களின் விவாதம் நடைபெறுவது வழக்கம்.
தற்போது தொடங்கிய கூட்டத் தொடரில் ஆளுநரின் உரையே விவாதத்துக்கு உள்ளான நிலையில், அவரது உரை மீதான விவாதம் நேற்று (11.1.2023)நடைபெற்றது.
இந்த விவாதத்தை திமுக உறுப்பினர் கம்பம் ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். விவாதத் தொடக்க தீர்மானம் கொண்டு வந்து அவர் கூறியது:
தமிழ்நாடு அரசால் அனுப்பப் பட்டு, அதற்கு ஆளுநரால் இசைவ ளிக்கப்பட்டு, பேரவைக்கு வழங்கப் பட்ட உரையில் சில பகுதிகளை இணைத்தும், விடுத்தும், ஆளுநர் உரையாற்றியமைக்கு இந்தப் பேரவை தனது வருத்தத்தைப் பதிவு செய்கிறது.
பேரவையின் மாண்பினைப் போற்றிடும் வகையில் ஜன. 9-இல் பேரவையில் பதிவு செய்யப்பட்ட ஆளுநரின் பேருரைக்கு பேரவை உறுப்பினர்கள் நன்றியுடையவர் களாவர் என்றார்.
இந்தத் தீர்மானத்தை திமுக உறுப்பினர் சுந்தர் வழிமொழிந்தார்.
அதைத் தொடர்ந்து உறுப் பினர்களின் விவாதம் நடை பெற்றது.