தாம்பரம்,ஜன.12-தாம்பரம் பெரியார் பகுத்தறிவு புத்தகக் கண்காட்சி மற்றும் புத்தக நிலையத்தில் தாம்பரம் புத்தக நிலையம் தொடங்கி முதலாம் ஆண்டு நிறைவு விழா மற்றும் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி 1.1.2023 அன்று மாலை 6.30 மணியளவில் தாம்பரம் பகுத்தறிவாளர் கழக தலைவர் எஸ்.ஆர்.வெங்கடேஷ் அறிமுக உரையில், உல கத்தில் பயங்கரமான பேராயு தம் எது எனக் கேட்ட போது துப்பாக்கியிலிருந்து வெளிவரும் தோட்டாவை விட மிக பெரிய ஆயுதம் புத்தகம் தான் என்று மார்ட்டின் லூதர் கிங் கூறினார் என்றும்.
எங்கே தங்கப் போகிறீர்கள் என்று லண்டன் நண்பர்கள் கேட்ட போது நூலகத்திற்கு அருகில் எந்த இடம் உள்ளதோ அங்கே தங்குவேன் என்று கூறி நூலகத்திற்கு அருகில் தங்கி யவர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் என்றும் கூறி தன் தொடக்கவுரையாற்றினார்.
தாம்பரம் மாவட்ட திரா விடர் கழக தலைவர் ப.முத் தையன் நூலகம் உருவான அந்த கடினமான நிகழ்வுகளை எடுத்துக் கூறி தலைமையுரை ஆற்றினார்.
தொடர்ந்து தாம்பரம் மாவட்ட கழக செயலாளர் கோ.நாத்திகன் முன்னுரையில் கழகத்திற்கு தொண்டு செய்ய இளைஞர்கள் பங்குபெறும் வகையில் எடுத்துரைத்தார்.
தொடர்ந்து மாநில பகுத் தறிவாளர் கழக செயலாளர் ஆ.வெங்கடேசன் புத்தக நிலை யம் உருவாக காரணமாக இருந்த மாநகராட்சி ஒப்பந்த தாரர் தோழர் சங்கருக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசுகள் வழங்கி சிறப் புரை ஆற்றினார்.
தொடர்ந்து பொதுவுடமை இயக்க தோழர் ஆர்.கிருட்டிண மூர்த்தி புத்தகங்களின் மேன் மைகளை பற்றியும் புத்தக நிலை யம் மேலும் சிறப்புற நடைபெற வாழ்த்தியும் உரையாற்றினார்.
தொடர்ந்து மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் இரா.சு.உத்ரா இந்த பெரியார் புத்தக நிலையம் வந்த பிறகு தான் எனக்கு புது வாழ்வே கிடைத்த மாதிரி நான் அனுபவிக்கிறேன் பெரியார் கொள்கையை படித்ததன் கார ணமாக தான் தன் வாழ்வில் அடைந்த சிறப்புகளை பற்றி எடுத்துக் கூறி இந்த பெரியார் இயக்கத்திற்கு வர காரணமாக இருந்து என்னை உற்சாமூட் டிய தோழர் மண்ணிவாக்கம் அருணா பத்மாசூரனுக்கு நன்றி பாராட்டி திராவிடர் கழக தோழர்கள் ஆண்,பெண் பேதமில்லாமல் மிக கண்ணிய மாக சுயமரியாதையுடன் பழகு கிறார்கள் என்று பெருமையு டன் எடுத்துக் கூறி தன் உரையை முடித்தார்.
தொடர்ந்து மாவட்ட பகுத் தறிவாளர் கழக துணைச் செய லாளர் அருணா பத்மாசூரன் இந்த நவீன காலத்தில் தந்தை பெரியார் அவர்களை இளைஞர்கள் மத்தியில் எப்படி கொண்டு செல்ல வேண்டும், தான் எப்படி கொண்டு செல் கிறேன், தன்னுடைய நவீன படைப்புகளை இளைஞர்கள் எப்படி பயன்படுத்தி பகிரு கிறார்கள் என்பதையெல் லாம் விளக்கி இந்த நூல் நிலையம் தொடர்ந்து வளர்ச்சியடைய தன்னாலான உழைப்பை வழங்கி துணை இருப்பேன் என்று கூறி தன் உரையை முடித்தார்.
தொடர்ந்து கம்யூனிஸ்ட் இயக்க தோழர் முனைவர் பெ. அண்ணாதுரை தனது உரை யில் தற்போது நம் நாட்டின் தற்போதைய நிலைகளை பற் றியும் நம் நாட்டில் சூழ்ந்துள்ள ஆபத்துகளை பற்றியும் இந்த ஆபத்தான நிலையை களை வதற்கு நாம் எப்படி ஒன்று சேர்ந்து களப் பணியாற்ற வேண் டும் என்றும் பல போராட்டங்க ளுக்கு, பல வெற்றிகளுக்கு, மக் கள் உரிமைகளுக்கு இந்த வர லாற்று பதிவுகளான புத்தகங் கள் தான் மிக முக்கியமாக பங் காற்றுகிறது என்பதையெல் லாம் விளக்கி நாட்டின் ஒற்றுமை ஒன்றே குறிக்கோள் என்று கூறி விடைபெற்றார்.
கூடுவாஞ்சேரி மா.இராசு பணி விருப்ப ஓய்வு பெற்று தொடர்ந்து கழகத்திற்கு பாடு பட மாவட்ட தலைவர் ப.முத் தையன் பொன்னாடை அணிவித்து இணைந்தார். மா.இராசுவின் இந்த அறிவிப்பால் தோழர்களை உற்சாக மூட்டி கை தட்டி மகிழ்ந்தனர்.
தொடர்ந்து கழக தோழர் கள் புத்தக நிலையம் மேலும் வளர தங்களின் ஆலோசனை களையும், கருத்துக்களையும் வழங்கி மகிழ்ந்தார்கள்.
தொடர்ந்து அறிவு வழி காணொலியில் (ஞீளிளிவி) ஒலி பரப்பிய நிகழ்ச்சித் தொகுப்பை அமெரிக்கா சிகாகோ நகரில் நிகழ்ச்சியை கண்டு கொண்டிருந்த பேராசிரியர் சோம.வேலா யுதம் அவர்கள் ஞீளிளிவி தொடர் பின் வாயிலாக நிகழ்ச்சியிலேயே நூலகத்தின் சிறப்பையும் நூல்களின் சிறப்பையும் வாழ்த்தி மகிழ்ந்து பாராட்டினார்.
நிகழ்வின் முடிவில் தோழர்கள் புத்தகங்கள்,நாட்குறிப்பு மற்றும் நாள் காட்டிகள் வாங்கி விடைபெற்றனர்.
தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன்ராஜ் நன்றியுரையாற் றினார்.
நிகழ்வில்ஊரப்பாக்கம் இரா. உத்திரகுமாரன்,ரெ.மகா லிங்கம், மு இராஜேஷ், சு. அன்பரசு, ஆ.விஜய் உத்தமன் ராஜ், க.புஷ்பராஜ், மாடம்பாக்கம் அ.கருப் பையா, சந்திரசேகரன், முடிச்சூர் என்.எஸ்.இளங் கோவன், பீர்க்கங்காரனை சு.மனோகரன், கரைமா நகர் தே.சுரேஷ், சுஅமுதன், எஸ்.சிவசங்கர், பம்மல் ந.கோபி, ரெ.கதிர் வேல், சு.கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.