பன்னாட்டு அபாகஸ் போட்டி-ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி மாணவர்கள் சாதனை

Viduthalai
1 Min Read

தமிழ்நாடு

 25.12.2022 அன்று எண்  கணித ஆசிரியர்கள் சங்கம்(BRILIANT ABACUS CENTER)  பன்னாட்டு அளவில் இணையதளம் மூலம் நடத்திய அபாகஸ் போட்டியில் ஆறாம் வகுப்பு மாணவி கவின்த்ரா, ஏழாம் வகுப்பில் பயிலும் மாணவன் ஆர்.எஸ்.கோகுல் ஆகியோர் சாம்பியன் பட்டத்தையும், ஆறாம் வகுப்பில் பயிலும் மாணவன் மோனிஷ், அய்ந்தாம் வகுப்பில் பயிலும் மாணவி கவிவாணி, நான்காம் வகுப்பில் பயிலும் மாணவன் தயாயுதன், மற்றும் மூன்றாம் வகுப்பில் பயிலும் மாணவர்கள்  ஹேமந்த்,  சுபிக்சன், சிறீநிதி, ரக்சிதாசிறீ, ஆகியோர் முதலிடத்தைப் பெற்று வெற்றிக் கோப்பைகளையும், பதக்கங்களையும், சான்றிதழ்களையும் பெற்று வெற்றி  வாகை சூடினர்.போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களைப் பள்ளியின் தாளாளர், முதல்வர், இருபால் ஆசிரியர்கள், மற்றும் பெற்றோர்கள் அனைவரும் பாராட்டி வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *