பன்னாட்டு அபாகஸ் போட்டி-ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி மாணவர்கள் சாதனை

1 Min Read

தமிழ்நாடு

 25.12.2022 அன்று எண்  கணித ஆசிரியர்கள் சங்கம்(BRILIANT ABACUS CENTER)  பன்னாட்டு அளவில் இணையதளம் மூலம் நடத்திய அபாகஸ் போட்டியில் ஆறாம் வகுப்பு மாணவி கவின்த்ரா, ஏழாம் வகுப்பில் பயிலும் மாணவன் ஆர்.எஸ்.கோகுல் ஆகியோர் சாம்பியன் பட்டத்தையும், ஆறாம் வகுப்பில் பயிலும் மாணவன் மோனிஷ், அய்ந்தாம் வகுப்பில் பயிலும் மாணவி கவிவாணி, நான்காம் வகுப்பில் பயிலும் மாணவன் தயாயுதன், மற்றும் மூன்றாம் வகுப்பில் பயிலும் மாணவர்கள்  ஹேமந்த்,  சுபிக்சன், சிறீநிதி, ரக்சிதாசிறீ, ஆகியோர் முதலிடத்தைப் பெற்று வெற்றிக் கோப்பைகளையும், பதக்கங்களையும், சான்றிதழ்களையும் பெற்று வெற்றி  வாகை சூடினர்.போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களைப் பள்ளியின் தாளாளர், முதல்வர், இருபால் ஆசிரியர்கள், மற்றும் பெற்றோர்கள் அனைவரும் பாராட்டி வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *