திருச்சி மாவட்டக் கழகக் கலந்துரையாடல்

1 Min Read

திராவிடர் கழகம்

பிப்9 இல் தமிழர் தலைவர் பங்கேற்கும் கூட்டத்தை சிறப்பாக நடத்த முடிவு

திருச்சி, ஜன.13 தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பங்கேற்கும் கூட்டத்தை மிகச் சிறப்பாக நடத் துவது என்று திருச்சி மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

திருவரங்கத்தில் திருச்சி மாவட்ட கழகப் பொதுக்கூட்டம் வருகின்ற  9.2.2023 அன்று  தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்கும் திருவரங்கம் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவித்து இருப்பதை முன்னிட்டு 8.1.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு திருச்சி மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜ் தலைமையில் மாவட்டக் கழகக் கலந் துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

இக்கலந்துரையாடல் கூட்டத்தில், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பங்கேற்கும் கூட்டத்தை மிகச்சிறப்பாக நடத்துவது என்றும், கூட்டத்திற்கான விளம்பரங்களை திருச்சி மாநகரெங்கும் சுவரெழுத்துப் பிரச்சா ரத்தை மேற்கொள்வதென்றும் முடிவெடுக்கப் பட்டது.

திருவரங்கம் நகர தலைவர் ச.கண்ணன் அனைவரையும் வரவேற்றார். விடுதலை வாசகர் வட்ட தலைவர் ஜெயராஜன், விடுதலை வாசகர் வட்ட செயலாளர் ஹரிஹரன், மாவட்ட செயலாளர் இரா.மோகன் தாஸ், திருச்சி மாவட்ட மகளிர் அணி தலைவர் ரெஜினாமேரி, திருச்சி மாவட்ட மகளிர் அணி செயலாளர் சாந்தி, திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் தமிழ் சுடர், திருவரங்கம் ரயில்வே முருகேசன், சிறீரங்கம் பொன்னுசாமி, திருவரங்கம் பெரியார் பெருந்தொண்டர் ராமநாதன், மணி மாதவி, திருவரங்க நகர செயலாளர் முருகன், திருச்சி மாவட்ட இளைஞரணி தலைவர் தேவா, இளைஞரணி செயலாளர் மகாமணி, இளை ஞரணி  அமைப்பாளர் ராஜசேகர்,  திருவரம்பூர் இளங்கோவன், திருவரங்கம் கலியபெருமாள். திருவரங்கம் ஜெயராமன், மாணவர் கழக சசிகாந்த், மாணவர் கழக குமரேசன், மாணவர் கழக ஜெயந்த், காட்டூர் கனகராஜ், காட்டூர் சங்கிலி முத்து, காட்டூர் ராஜேந்திரன், சோமரசம் பேட்டை கருப்பு, கோகுல் மற்றும் பல தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *