கருநாடகத்தில் பிஜேபி தன் வழக்கமான வேலையை தொடங்கிவிட்டது ஆட்சியை கவிழ்க்க சட்டமன்ற உறுப்பினர்களுடன் பேரம் ஆதாரத்தை வெளியிடுவதாக காங்கிரஸ் அறிவிப்பு

Viduthalai
1 Min Read

பெங்களூரு, அக்.29 கருநாடகாவில் கடந்த 2019-ஆம் ஆண்டு கூட்டணி அரசை கவிழ்த்தது போல தற்போது காங்கிரஸ் அரசை கவிழ்க்க சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் முயற்சியில் பாஜகவினர் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக அம்மாநில காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கனிகா ராவ் கூறியிருந்தார். 

இதுகுறித்து கருத்து தெரிவித் துள்ள கருநாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் மிகப்பெரிய சதித்திட்டம் நடைபெறுவது குறித்து தங்களுக்கு தெரியும் என்றும், எனினும் அது ஒருபோதும் வெற்றி பெறாது என்றும் குறிப்பிட்டார். 

மேலும், பாஜகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கோடிக்கணக்கில் பணம், அமைச்சர் பதவி என்றெல்லாம் கூறி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் களை தங்கள் பக்கம் இழுக்க முயன்று வருவ தாகவும், அது நிச்சயம் தோல்வியில் முடியும் என்றும் தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *