அவனும் நீயும் (தமிழ் அடிமை)

1 Min Read

பார்ப்பானைப் பார்த்து நீ ஏன் பொறாமைப்படுகிறாய்.

அவன் கட்டுப்பாடான சமூகத்தைச் சேர்ந்தவன்.

நீ கட்டுப்பாட்டை வெறுக்கும் சமுதாயத்தைச் சேர்ந்தவன்.

அவன் கட்டுப்பாட்டுக்கு உழைப்பவன்.

நீ கட்டுப்பாட்டை உடைப்பதற்குக் கூலி வாங்குபவன்.

அவன் இனநலத்தைப் பார்ப்பவன்.

நீ சுயநலத்தைப் பார்ப்பவன்.

அவன் மதத்தில் அவன் ஜாதி உயர்வு.

உன் மதத்தில் உன் ஜாதி தாழ்வு.

மனித சமுதாயத்திற்கு சமத்துவமுள்ள மதத்தை அவன் உதறித் தள்ளுகிறான்.

நீ சமத்துவமில்லாத மதத்தைக் கட்டித் தழுவுகிறாய். அதற்கு அடிமையாய் இருகிறாய்.

உன் மொழியை மிலேச்ச மொழி என்று அவன் வைதிக காரியங்களில் ஒதுக்கித் தள்ளுகிறான்.

நீ அவன் மொழியை வைதிகத்துக்கும், மற்றும் உன் பெருமைக்கும், புகழுக்கும் பயன்படுத்திக் கொள்ளுகிறாய்.

மேலும், உனக்கு இனம் இல்லை. இனப்பற்று இல்லை. சமயம் இல்லை. சமயப்பற்று இல்லை. மொழிப்பற்று இல்லை.

உன்னைப்பற்றிய கலை இல்லை. இலக்கியம்இல்லை.

நீ அவனுடன் போட்டி போட்டு என்ன செய்ய முடியும். இவைகளை மாற்றிக் கொள்ள உன் மானம் உன்னை என்றைக்காவது தூண்டுமா?

 – குடிஅரசு – பெட்டிச்செய்தி – 26.02.1944

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *