ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

1 Min Read

 14.1.2023

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ஓபிசி பிரிவினரில் உள் ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக 2017 அக்டோபரில் அமைக்கப்பட்ட ஆணையம் ஜனவரி 2018இல் அறிக்கை அளித்திருக்க வேண்டும். ஆனாலும் இன்னமும் பணி முடியாத நிலையில் தற்போது ஆணையத்தின் பணிக் காலம் மேலும் ஆறு மாத காலம் நீட்டிக்க ஒன்றிய அமைச்சரவை முடிவு செய்யும் என தகவல்.

* இந்தியாவை வேகமாக வளரும் பொருளாதாரம் என்று அழைப்பது ஏமாற்றும் கூற்று. இது வரவிருக்கும் பொருளாதார நெருக்கடியை மறைக்கிறது என தனது கட்டுரையில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் ஹிமான்சு குறிப்பிடுகிறார்.

தி டெலிகிராப்:

* ஜனவரி 26 முதல் நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்களால் வழங்கப்படும் சக இந்தியர்களுக்கு ராகுல் எழுதிய கடிதத்தில், பிரதமர் நரேந்திர மோடிக்கு நம்பகமான மாற்றாக தன்னை முன்வைத்துள்ளார்.அனைத்து மக்களின் நலன்களுக்கும் பாடுபடுவேன் என்பதில்  நான் உறுதியாக இருப்பேன் என்கிறார்.

தி இந்து:

* அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் கட்டாயத் தமிழ் மொழித் தாள் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் டிசம்பர் 1, 2021 அன்று வெளியிடப்பட்ட அரசாணைக்கு சட்டப்பூர்வ நடைமுறையை தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதா உறுதிப்படுத்துகிறது.

* கருநாடகாவில் சிறீராம் சேனை தேசியத் தலைவர் பிரமோத் முத்தாலிக், இந்துக்கள் தங்கள் பெண்களைப் பாதுகாக்க வாள்களை வணங்க வேண்டும்; புத்தகங்களை அல்ல என்கிறார்.

– குடந்தை கருணா 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *