வாழ்க தமிழர் திருநாள்

Viduthalai
1 Min Read

(வண்ணம்)

மற்றவை

தனனதந்த தத்தத்தனந்த தனதானா

தனனதந்த தத்தத்தனந்த தனதானா

தனனதந்த தத்தத்தனந்த தனதானா தனதானா

தளையவிழ்ந்து செக்கச்சி வந்த மலர் போலே

தமிழ்நிலஞ்சி றக்கப்பு ரந்த இறைபோலே

தலைசிறந்த முத்தைச் சொரிந்த அலைமேலே கதிர் காணீர்!

தவழ்குழந்தை கொட்டிப்பு ரிந்த நகைதானோ!

அழகுமங்கை நெற்றிக் கிருந்த ஒளிதானோ!

தகதகென்று பொற்றட்டெழுந்த வகையாதோ அறிவீரோ?

இளையசெங் கதிர்க்குப்பரிந்து தொழுவாரே

இதுவிதெங்கள் தைக்குச்சிறந்த முதல்நாளே

எனவிளைந்த நெற்குத்தி எங்கும் மகிழ்வாரே மடவாரே!

இலைமாங்கு ருத்துக்கள்தெங்கு கமுகாலே

எழிலுறும்செ ழிப்புற்எக்கள் தமிழ்நாடே

இசைஎழுந்து திக்கெட்டுமுந்தும் அதனூடே மகிழ்வோடே!

வளமிகும்பு லத்திற்றிரிந்து வருமாடே

வகையொடுங்க லத்திற்கறந்து தருபாலோ

டரிசியும்சு வைப்புக் கரும்பு பிழிசாறோடோ டனலாலே!

இனிதுபொங்க வைத்துக்கமழ்ந்த பொடியோடே

மலிவொடும்ப ருப்புச்சொரிந்த கடிதேனோ

அளவநன்றி றக்கிருந்திருந்தும் இளவாழை இலைமேலே!

உளவிருந்தி னர்க்குப் பகிர்ந்து பரிவாலே

உடனிருந்து ணப்பெற் றடைந்த சுவையாலே

உளமகிழ்ந்த தைச்சற் றியம்ப முடியாதே ஒருநாவால்!

உழவரன்பு ழைப்பிற் பிறந்த பருவாழ்வே

தழைக நன்றெ மைப்பெற்பு வந்ததமிழ்தானே

தழைக எங்கள் வெற்றிக்குகந்த பெருநாளே திருநாளே!

– புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *