சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சி தொடக்கம்: 30 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பு

3 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

தமிழ்நாடு

சென்னை, ஜன. 17- சென்னையில் முதல்முறையாக பன்னாட்டுப் புத்தகக் காட்சி, நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத் தில் நேற்று (16.1.2023) தொடங்கியது. இதில் ஜெர்மன், ஜப்பான் உட்பட 30 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

ஜெர்மனியின் ‘பிராங்பேர்ட்’ பன்னாட்டுப் புத்தகக் காட்சி 1949ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதுவே உலகின் பெரிய புத்தகக் காட்சியாக விளங்குகிறது. அதேபோல், தமிழ்நாட்டிலும் பன்னாட்டு புத்தகக் கண்காட்சியை நடத்துவதற்கு பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்தது.

அதன்படி நூலகத் துறை, தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில், சென்னையில் முதல்முறையாக பன்னாட்டுப் புத்தகக் காட்சி, சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 3 நாட்கள் நடைபெறு கிறது. பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, பன்னாட்டுப் புத்தகக் காட்சியை நேற்று (16.1.2023) தொடங்கி வைத்தார். இதில், அமெரிக்கா, மலேசியா, துருக்கி, இந்தோனேசியா, தான்சானியா உள் ளிட்ட 30 வெளிநாடுகளின் அரங் குகள் உட்பட 66 அரங்குகள் அமைக்கப் பட்டுள்ளன. அவற்றில் அந்தந்த நாடுகளின் புகழ்பெற்ற நூல்கள் இடம் பெற்றுள்ளன.

‘தமிழ் முற்றம்’ என்ற பெயரில் உள்ள அரங்குகளில் தமிழ்நாட்டின் பிரபலமான புத்தகங்கள், எழுத்தாளர்களின் படைப்புகள் வைக்கப்பட் டுள்ளன. மேலும், கண்காட்சியில் பிரம்மாண்ட திருக்குறள் புத்தகம் நுழைவுவாயில் அருகே இடம் பெற் றுள்ளது. அதில் 106 திருக்குறள் மற்றும் அதன் விளக்கங்கள் தமிழ், பிற மொழிகளில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 

வெளிநாட்டு எழுத்தாளர்கள், பதிப்பா ளர்கள் கலந்துரையாட பிரத்யேக அரங்கமும் பன்னாட்டுப் புத்தகக் காட்சியில் அமைக்கப்பட் டுள்ளது.

விழாவில் அமைச்சர் அன்பில் மகேஸ் பேசியதாவது; உலகின் பழமை யான மொழி தமிழ். அதன் சிறப்பை உலக அரங்கில் கொண்டு செல்வது அவசியமாகும். 

அதற்கு இந்த புத்தகக் காட்சி உதவிகரமாக இருக்கும். மேலும், அறிவுப் புரட்சியை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும். இந்த புத்தகக் காட்சி 18ஆம் தேதி (நாளை) வரை நடைபெறும். நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னி லையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட உள்ளன என்றார். 

இந்நிகழ்வில் ஜெர்மன் தூதர் ஜாக்குலின் ஹீதே, ஜப்பான் தூதர் டகா மசாயுகி, மலேசியா துணைத்தூதர் சங்கீதா பாலசந்திரா, சிங்கப்பூர் தூதர் எட்கர் பங், தாய்லாந்து தூதர் நிடிரூகே போன்பிரசர்ட், தமிழ்நாடு நாடாளு மன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண் டியன், பள்ளிக்கல்வித் துறை செயலர் காகர்லா உஷா, தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் அய்.லியோனி, மேலாண்மை இயக்குநர் ஆர்.கஜலட் சுமி, நூலகத் துறை இயக்குநர் 

க.இளம்பகவத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியதாவது: 

இந்த புத்தகக் காட்சி வெளிநாடுகளின் புத்த கங்களையும், தமிழ்நாட்டின் நூல்களை யும் நாடுக ளுக்கு இடையே விற்பனை செய்து கொள்வதற்கான தளமாகும். தமிழ் இலக்கியங்களை உலக அளவில் எடுத்து செல்லவும், மற்ற நாடுகளில் உள்ள புத்தகங்களை இங்கே கொண்டு வரவும் மொழிபெயர்ப்பு செய்யப்பட வேண்டும். 

இதற்காக ரூ.1.5 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 100 புத்தகங்கள் மட்டுமே மொழி பெயர்க்கப்பட்டு வெளிநாடு களுக்கு சென்றடைந்துள்ளன. இந்த புத்தகக் காட்சியின் மூலம் 50 நூல்களா வது மொழிபெயர்க்க நடவடிக்கை எடுக்கப் படும். அதேபோல், மற்ற நாடுகளின் நூல்களும் தமிழில் மொழி பெயர்ப்பு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார். பன்னாட்டுப் புத்தகக் காட்சி தினமும் காலை 10 முதல் இரவு 7 மணி வரை நடைபெறும். பொது மக்கள் இதைப் பார்வையிட மாலை 4 முதல் 7 மணி வரை அனுமதிக்கப்படு வார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *