சென்னை காவலர் குடியிருப்பில் பொங்கல் விழாவை கொண்டாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

1 Min Read

சென்னை, ஜன. 17- சென்னை கொண்டித்தோப்பில் உள்ள காவலர் குடியிருப்பு வளாகத்தில், குடும்பத்தினருடன் கலந்துகொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் விழாவைக் கொண்டாடினார்.

தமிழர் திருநாளான பொங்கல் விழா மாநிலம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சூழலில் தனது குடும்பத்தினருடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கொண்டித்தோப்பு பகுதியில் அமைந்துள்ள காவலர் குடியிருப்பு வளாகத்தில் பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடினார். இந்த நிகழ்வில் காவலர் குடியிருப்பில் உள்ள காவல்துறையினரும் தங்கள் குடும்பத்தினர் சகிதமாக கலந்துகொண்டனர்.இந்த உற்சாக மான நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மகனும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், மருமகள் கிருத்திகா ஆகியோர் கலந்துகொண்டனர். பொங்கல் விழா கொண்டாட்ட நிகழ்ச்சியில் தமிழ்நாடு காவல்துறையின் தலைவர் சைலேந்திர பாபு மற்றும் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *