தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் மாண்புமிகு க.பொன்முடி அவர்களின் சகோதரர் டாக்டர்
க. தியாகராசன் மறைவடைந்தமைக்காக, இன்று காலை 9.30 மணியளவில் தமிழர் தலைவர் ஆசிரியர் சென்னையில் உள்ள அமைச்சர் க.பொன்முடி அவர்களை, அவரது இல்லத்தில் சந்தித்து, ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்தார். டாக்டர் தியாகராசன் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார். அமைச்சர் க. பொன்முடியின் வாழ்விணையர் விசாலாட்சி, மகன் கவுதம சிகாமணி எம்.பி., சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார் மற்றும் குடும்பத்தினர் உடனிருந்தனர். அனைவருக்கும் கழகத் தலைவர் ஆறுதல் கூறினார். கழகத் துணைத்தலைவர் கலி. பூங்குன்றன் உடன் சென்றிருந்தார்.