பார்ப்பனரைப் பாரீர்!

Viduthalai
1 Min Read

 நான் தினமும் மதுரை டி.வி.எஸ். நகரில் நடைப்பயிற்சி செய்வது வழக்கம். (போக்கு வரத்துக் குறைவான பகுதியாதலால்) அது மிகுதியாக பார்ப்பனர்களே வாழும் பகுதி. 

எஞ்சிய சிலரும் பார்ப்பன அடிமைகளே.

அதில், சந்தானம் ரோடு என்ற தெருவில் உள்ள ஒரு பங்களாவின் முகப்பில் ‘பெரியவா போட்ட பிச்சை’ என ஒரு வீட்டிற்கு பெயர்ப்பலகை வைத்திருந்ததைப் பார்த்தேன்.

காஞ்சிப் பெரியவாவினால், பலனடைந்த பார்ப்பனர் ஒருவர் தன் நன்றியறிதலை எப்படிக் காட்டிக் கொள்கிறார் பாருங்கள். அதுதான் அவர்களின் இனவுணர்வு.

நம்மில் எத்தனை பேர் இப்படி இனவு ணர்வைக் காட்டிக்கொள்ள முன் வருவர்? பெரியாரால், ஆசிரியரால் கொண்டு வரப்பட்ட இடஒதுக்கீட்டால் படித்து, வேலை பெற்று முன் னேறிய நம் மினத்தார், அவர்களின் படத்தை வீட்டிற்கு உள்ளே கூட மாட்ட யோசிக்கின்றனர்.

பெரியார் அடிக்கடி சொல்வதுபோல், “திராவிட மக்களே! நீங்கள் முன்னேற வேண்டு மெனில், பார்ப்பானை முன் மாதிரியாகக் கொள் ளுங்கள்’’ என்பார். ‘நன்றியுணர்ச்சியிலும் பார்ப் பானைப் பாருங்கள்’ என நம்மின மக்களுக்கு இப் போது நாம் உரைக்க வேண்டிய நிலையில் உள்ளோம். திராவிட இன மக்களே சிந்திப்பீர். இனவுணர்வு கொள்வீர்.

– பெரி.காளியப்பன், 

மதுரை

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *