ஏட்டுத் திக்குகளிலிருந்து…

Viduthalai
1 Min Read

 19.1.2023

டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:

 கூட்டாட்சி அமைப்பை மோடி அரசு அழிக்கிறது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு.

டெக்கான் கிரானிக்கல்,சென்னை:

 கம்மத்தில் நடைபெற்ற கே.சந்திரசேகர ராவ் துவங்கிய பாரத் ராஷ்டிர சமிதி எனும் அகில இந்திய கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர்கள் பினராயி விஜயன், அரவிந்த் கெஜ்ரிவால், பக்வத் மான் மற்றும் தலைவர்கள் அகிலேஷ் யாதவ், டி.ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

றீ ஒன்றிய அரசுப் பணிகளுக்கு 2.1% தமிழ்நாடு இளைஞர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டின் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அரசு மற்றும் தனியார்த் துறைகளில் வேலை வாய்ப்பு பெற அனைத்து மாவட்டங்களிலும் வழிகாட்டுதல் மய்யங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு.

– குடந்தை கருணா

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *