ஆளுநர் போக்கை கண்டித்து 234 தொகுதிகளிலும் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

1 Min Read

அரசியல், தமிழ்நாடு

சென்னை, ஜன.20 ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து அரசமைப்பு சட்டத்துக்கு எதிராக செயல்பட்டு வருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில் அவருக்கு எதிராக தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் காங்கிரஸ் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசிய தாவது: ஆளுநர் ரவியின் தமிழ் மற்றும் தமிழர் விரோதப் போக்கை கண்டித்து 234 தொகுதிகளிலும் காங்கிரஸ் சார்பில்   ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இது ரவி என்ற தனி மனிதனுக்கு எதிரான போராட்டம் இல்லை.அவர் மய்யப்படுத்தும் ஆர்எஸ்எஸ்,பாஜக, சனாதன தர்மம் என்ற பழைமைவாதம் ஆகிய வற்றுக்கு எதிராக இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.  காந்தியை போன்ற ராம பக்தர் யாரும் இருக்க முடியாது. இன்றுராமர் இருந்திருந்தால் காந்திக்குதான் வாக்களித்திருப்பார். பாஜகவுக்கு வாக்களித் திருக்க மாட்டார்.காந்தி கடவுள், மத நம்பிக்கை உடையவர். ஆனால் தீண்டாமை, உடன் கட்டை ஏறுதலை எதிர்த்தார். ஆனால்ஆதீனங்களோ, சங்கராச்சாரியாரோ தீண்டாமையை எதிர்க்கவில்லை. காங்கிரஸ் கட்சி பழமை வாதத்துக்கு எதிரானது. காங்கிரஸ் எந்தமதத்துக்கும் ஆதரவானது இல்லை.எதிரானவர்களும் இல்லை. எங்களுக்கும் மத உணர்வு உண்டு. ஆனால் மத வெறி இல்லை.ஆளுநர் அரசமைப்பு சட்டத்துக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். அவர் இந்திய அரசின் பிரதிநிதி. ஆர்எஸ்எஸ், பாஜக பிரதிநிதிபோல ஆளுநர் பேசக்கூடாது. பாஜக, ஆர்.எஸ்.எஸ் சொல்லித் தருவதை அப்படியே செயல்படுத்தும் மாணவராக ஆளுநர் உள்ளார். இவ்வாறு அவர் கூறினார். ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில துணைத் தலைவர்கள் பொன்.கிருஷ்ணமூர்த்தி, ஆ.கோபண்ணா, உ.பலராமன், மாவட்ட தலைவர்கள் சிவ.ராஜசே கரன், எம்.எஸ்.திரவியம், டில்லி பாபு,  எஸ்சி அணித் தலைவர் ரஞ்சன் குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *