ஒற்றைப் பத்தி

1 Min Read

யார் துவேஷிகள்?

கேள்வி: ஹிந்து மதத்தில் பிறந்து, ஹிந்துவாக வாழ்ந்து,ஹிந்துக்கள் சடங்குகளுடன் ஹிந்துத்துவ துவேஷம் கொள்வது ஏன்?

பதில்: ஹிந்துக்களைத் துவேஷித்தால்தான் மைனாரிட்டி மக்கள் வாக்களிப்பார்கள் என்பதே அந்தச் செய்தி.

‘துக்ளக்’, 18.1.2023, 

பக்கம் 32

நாத்திகத்திற்கும், ஹிந்து மதத்தில் இடம் உண்டு என்று ஆனபிறகு, ஹிந்து மதத்தை விமர்சிப்பது பற்றிப் புலம்புவானேன்?

உண்மையிலேயே துவேஷிப்பவர்கள் யார்? பிறக்கும்போதே பிராமணன் என்றும், சத்திரியன் என்றும், வைசியன் என்றும், சூத்திரன் என்றும், பஞ்சமன் என்றும் வகைப்படுத்தியது எந்த மதம்? ஹிந்து மதம்தானே!

இந்த ஏற்பாட்டை பிர்மா என்ற கடவுள்தான் செய்தார் என்பதும் ஹிந்து மதம்தானே!

பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர்களும் பாவ யோனியிலிருந்து பிறந்தவர்கள் என்று ‘பகவான்’ கிருஷ்ணன் சொன்னதாகக் கீதை கூறுகிறதே! (அத்தியாயம் 9, சுலோகம் 32).

இதில் துவேஷிப்பவர்கள் யார்? இவர்கள் எல்லாம் பாவ யோனியிலிருந்து பிறந்தவர்களாம்; குருமூர்த்தி கூட்டத்தைச் சேர்ந்த பார்ப்பனர்கள் புண்ணிய யோனியிலிருந்து பிறந்தவர்களா? சீ… எவ்வளவுப் பெரிய ஆபாசக் கூட்டம் இது!

கொஞ்சம்கூட வெட்கம் இல்லாமல், முன்யோசனையும் இல்லையே! பகுத்தறிவோடு சிந்தித்துப் பேசுபவர்களை ‘துவேஷிகள்’ என்று தூற்றுவது யோக்கியமான செயலா?

தென்னாட்டுப் பார்ப்பனர்கள் தாங்களே துவேஷிகளாக இருந்துகொண்டு, மற்றவர்களைப் பார்த்துத் ‘துவேஷிகள், துவேஷிகள் என்பார்கள்’ என்று லாலா லஜபதி சொன்னதுதான் நினைவிற்கு வருகிறது.

குருமூர்த்தி கூட்டத்திற்கு ஒன்று! முதலில் உங்கள் முதுகில் தொங்கும் பூணூலைத் ‘தூ’ என்று சொல்லி தூக்கி எறியுங்கள் பார்க்கலாம்!

தாங்கள் துவிஜாதி (இரு பிறப்பாளர்கள்) என்று காட்டுவதுதானே அந்தச் சின்னம்! துவேஷம்!

பார்ப்பனப் பெண்களுக்குக்கூடப் பூணூல் அணியும் உரிமை கிடையாதே! அவர்களையும் சேர்த்து விபச்சார தோஷமுடையவர்கள் என்று உங்கள் மனுதர்ம சாஸ்திரம் (அத்தியாயம் 9, சுலோகம் 19) சொல்லவில்லையா?

பெற்ற தாயையே விபச்சார தோஷமுள்ளவர் என்று கூறும் கேடுகெட்ட கூட்டம் யாரைப் பார்த்து துவேஷிகள் என்று கூறுவது?

 –  மயிலாடன்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *